Visitors have accessed this post 1003 times.

ஆன்மீக ஞானம்

Visitors have accessed this post 1003 times.

ஆன்மீக ஞானம்  

 வாழ்க்கையில்  மேம்பட அறிவோம் ஆன்மீகம்       

 

பெண்கள் தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் என்ன ?…

எந்த ஒரு நல்ல விசயம்  ஆரம்பிப்பதற்கு முன்னாள் ,அன்றாடம் நம் முடைய வழிபாடுகளை துவங்கும் முன்னாள் நாம் செய்ய கூடிய முதல் விசயம் தீபம் ஏற்றுதல் .இந்த தீபங்கள் ஏற்றுவதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் .எந்த எண்ணையினால் தீபம் ஏற்றலாம் ,என்ன திரி போடலாம் ,என்ன விளக்கு பயன்படுத்தலாம் ,எந்த திசை நோக்கி விளக்கு ஏற்றலாம் ,என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் .

எங்கே தீபம் எரிகிறதோ அங்கே இருள் மறையும் ,அதேபோல் தீபம் ஏற்றி வழிபடுகின்ற போது நம்முடைய வாக்கையில் இருக்க கூடிய இருள் மறைந்து ஞானஒளி என்பது நமக்குள்ளே பிறக்கிறது .இது பொதுவான வழிபாடாக இருந்தாலும் இந்த தீபத்தினாலேயே பலன் பெற்ற அடியார்கள் பலர் உண்டு . நம் நந்தி அடிகளார் இவர் தண்ணீரிலேயே விளக்கேற்றி சிவபெருமானின் அருளை பெற்றவர் .கணம் புள்ளர் தன் தலைமுடியையே விளக்காக்கி சிவபெருமானின் அருளை பெற்றவர் கலியநாயனார் இவர் தன் ரத்தத்தையே எண்ணையாக்கி விளக்கேற்றி சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெற்றவர் .

வேத மந்திரங்களுக்கு எல்லாம் அடிப்படை மந்திரமான காயத்ரி மந்திரத்தை தந்த விஷ்வாமித்திரர் தன் காயத்தையே திரியாக மாற்றி  இந்த மந்திரத்தை பெற்று தந்தார் இன்னும் ஒரு படி மேலே சொன்னால் ஒரு சிவபெருமானின் சன்னிதானத்தில் இருந்த எலி உயிருக்கு பயந்து தாவி ஓடும் போது அணையும் நிலையில் இருந்த நெய்திபம் தூண்டப்பட்டு பிரகாசமாக எரிந்தது .அதனால் சிவபெருமான் அந்த எலியை மகாபலி சக்ரவர்த்தியாக பிறக்க செய்தார் .இப்படி விளக்கினால் நலன் பெற்றவர்கள், ஒளியினால் நலன் பெற்றவர்கள் பலர் .இவ்வளவு சிறப்புமிக்க இந்த விளக்கை நம் வீட்டில் எப்படி ஏற்றலாம் என்று தெரிந்து  கொள்வோம் . 

பொதுவாக விளக்கு ஏற்றும் நேரம் காலை 4.30 மணி முதல் ,6 மணிக்குள் விளக்கு ஏற்ற வேண்டும் .சூரிய உதயத்திற்கு முன் விளக்கேற்றுவது மிக மிக நன்மையை நம் குடும்பத்திற்கு பெற்று தரும் .இந்த விளக்கை ஏற்றும் போது சுத்தமாக குளித்து நல்ல ஆடைகளை அணிந்து விளக்கு ஏற்ற வேண்டும் .மாலையில் 6 மணிக்கு விளக்கு ஏற்ற வேண்டும் .அதாவது சூரியன் மறைந்த பிறகு விளக்கு ஏற்ற வேண்டும் .வீடுகளில் விளக்கேற்றி வழிபடுகின்ற போது அந்த விளக்கு எந்த திசையில் இருக்க வேண்டும் அந்த விளக்கு எத்தனை முகங்கள் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் .

  தீபங்களில் ஒரு முகம் :- ( ஏக முகம் ) ஏற்றினால் நமக்கு நினைத்த செயல் கைகூடும் இரண்டு முகம்…ஏற்றினால் குடும்பம் சிறந்து விளங்கும் .மூன்று முகம்… ஏற்றினால் புத்திர தோஷம் நீங்கும் .நான்கு முகம் …செல்வத்தை பெருக்கும் .ஐந்து முகம் …சகல நன்மைகளும் உண்டாக்கும் .

விளக்குகள் வைக்கக்கூடிய திசைகள் ,பொதுவாக தீபங்கள் இந்த திசையில் எரிய வேண்டும் என்று சொல்வார்கள் ,தீபங்களுக்கு திசை என்பதே கிடையாது .தீபம் ஏற்றக்கூடிய விளக்குகளின் முகம் பார்க்க கூடிய திசைதான் நமக்கு கணக்கு .கிழக்கு திசை நோக்கி தீபத்தை வைத்து வழிபட்டால் துன்பம் நீங்கும் ,குடும்பம் அபிவிருத்தி ஆகும் .மேற்கு திசை நோக்கி விளக்கை வைத்து வழிபட்டால் கடன் நீங்கும் தோஷங்கள் போகும் ,வடக்கு திசை நோக்கி விளக்கை வைத்து வழிபட்டால் திருமண தடை நீங்கும் ,தெற்கு திசையில் விளக்கு ஏற்ற கூடாது .

 

என்ன எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் …..

நெய்யினால் தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும் ,எந்த காரியத்தை நினைத்து தீபம் ஏற்றுகிறோமா அந்த காரியம் நிறைவேறும் ,நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும் ,தேங்காய் எண்ணெய் வசீகரத்தை உண்டு பன்னும் இலுப்பை எண்ணெய் சகல காரியத்திலும் வெற்றியை பெற்று தரும்,                      விலக்கெண்ணெய் புகழ் உண்டாக்கும் ,வேப்ப எண்ணெய் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் ,ஐந்து எண்ணெய்களும் சேர்த்து ஏற்றக்கூடிய தீபம் தெய்வத்தின் அருளையும் ,குலதெய்வத்தின் அருளையும் ஒருசேர நமக்கு தரும் .

 

எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் உகந்தது என்பதை பார்க்கலாம் ….

விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் -யில் விளக்கு ஏற்றினால் நல்ல பலன்கள் நமக்கு கிடைக்கும் ,மஹாலக்ஷ்மி -க்கு நெய்யினாலும் ,குலதெய்வத்திற்கு வேம்பு ,இலுப்பை ,நெய் ஆகியவற்றை கலந்து ஏற்றலாம் ,பைரவருக்கு நல்லெண்ணெய் ,அம்மனுக்கு விளக்கெண்ணெய் ,வேப்ப எண்ணெய் ,தேங்காய் எண்ணெய் ,இலுப்பை எண்ணெய் ,நெய் ஆகியவற்றால் விளக்கு ஏற்றலாம் .முருகன் ,பெருமாள் ,சிவன் மற்ற பிற தெய்வங்களுக்கு பஞ்ச கூட்டு எண்ணையினாலும் ,நெய்யினாலும் தீபம் ஏற்றி வழிபடலாம் .

அதேபோல் விளக்கில் பயன்படுத்தபடும் திரிகளை பற்றி பார்போம் …

பொதுவாக பஞ்சு திரி போட்டு விளக்கேற்றி வழிபடுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் ,எந்த எந்த திரி போட்டு விளக்கேற்றினால் என்ன பலன் கிடைக்கும் வாழைநார் திரி போட்டு வழிபட்டால் முன்னோர்களின் சாபம் நீங்கும் ,தெய்வ குற்றம் நீங்கும் ,தாமரை தண்டு திரி போட்டு வழிபட்டால் முன்வினை பாவம் போகும் நிலைத்த செல்வம் கிட்டும் ,வெள்ளை எருக்கம் பட்டை திரி போட்டு வழிபட்டால் செல்வம் பெருகும் ,புது மஞ்சள் துணியில் திரி செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் நோய் நொடி நீங்கும் ,சிவப்பு துணியால் தீபம் போட்டால் குழந்தை பேரு உண்டாகும் ,வெள்ளை நிற துணியால் தீபம் ஏற்றி வழிபட்டால் நற்பலன்கள் தேடிவரும் .

இந்த துணி வகையில் செய்யப்படும் திரிகள் ,முதலில் புது துணி வாங்கி அதை பன்னீரில் ஊறவைக்க வேண்டும் ,அதன் பிறகு அதை நன்றாக காயவைத்து ,பிறகு துணியை திரியாக வெட்டி பயன்படுத்த வேண்டும் .கருப்பு துணியால் சனி பகவானுக்கு எள்ளை மூட்டையாக கட்டி நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடலாம் .

அதேபோல் எந்த வகையான விளக்கு பயன்படுத்தினால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் , மண் விளக்கினால் தீபம் ஏற்றினால் பீடைகள் நீங்கும் ,வெள்ளி விளக்கினால் தீபம் ஏற்றினால் மஹாலக்ஷ்மியின் அருள் மேலோங்கும் ,பஞ்சலோக விளக்கினால் தீபம் ஏற்றினால் தேவதைகள் வசியம் ஆவார்கள் ,வெங்கலத்தினால் ஆனா விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டால் ஆரோக்கியம் அதிகரிக்கும் ,இரும்பு விளக்கினால் தீபம் ஏற்றி வழிபட்டால் சனி கிரகத்தின் தோஷங்கள் நீங்கும் .

 

பெண்கள் மாதவிடாய் காலத்தில் கோவிலுக்கு செல்லலாமா ?…

நிறைய பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கோவிலுக்கு போகலாமா ,விரதம் இருக்கலாமா ,விளக்கு ஏற்றி வழிபடலாமா என்ற சந்தேகங்கள் இருக்கிறது .இந்த மாதவிடாய் என்பது வரமா ,சாபமா இதற்கு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது .அது திருவிளையாடல் புராணத்தோடு  தொடர்புடையது என்று சொல்லலாம் .திருவிளையாடல் புராணம்  தொடங்குகின்ற போதே இந்திரன் பழிதீர்த்த படலம் என்று தொடங்குகிறது .

அந்த படலத்தோடு தொடர்புடைய வரலாறுதான் இதனுடன் சேர்ந்து இருக்கிறது .இந்திரனிடம் இருக்கின்ற இந்த சாபத்தை யாராவது பகிர்ந்து கொள்கின்ற பட்சத்தில் அந்த சாபத்தில் விடுதலை பெற்று சௌக்கியமாக வாழலாம் என்ற நிலை வருகின்ற போது அது நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நான்கு இடத்திற்கு பரவி செல்கிறது .அது எப்படி உருமாறுகிறது ,யாரிடத்தில் எப்படி வந்து அடைகிறது என்றால் ,அது நான்கும் என்னவென்றால் நிலம் ,நீர் ,மரம் ,பெண் .

இந்த நான்கிற்கும் அந்த சாபம் பிரிக்கப்படுகிறது .அது எப்படி என்றால் ,நிலத்தில் உவராக இருப்பது சாபமாகவும் ,எவ்வளவு வறண்டு போனாலும் மீண்டும் அது தன்னைத்தானே புத்துயிர் பெற்று கொள்ளும் என்பது வரமாகவும் அளிக்கப்பட்டுள்ளது .மரத்தில் பிசின் என்பது சாபமாகவும் ,அதை வெட்ட வெட்ட மீண்டும் என்பது துளிர்க்கும் என்பது வரமாகவும் சொல்லப்படுகிறது .

நீரில் நுரையாகவும் மற்றவற்றை புனித படுத்த இந்த நீர்தான் பயன்படும் என்பது அதற்கு வரமாகவும் சொல்லப்படுகிறது .பெண்களுக்கு அது மாதவிலக்காகவும் ,மதிப்பும் மரியாதையும் அவளுக்கு அதிகரித்து கடவுள் நிலைக்கு தன்னை உயர்த்தி செல்லுவாள் என்பது வரமாகவும் தரப்படுகின்றது .

இப்படி நான்கில்  வரம் சாபம் இரண்டுமே பிரிந்து விடுகிறது .அப்படி பெண்ணுக்கு ஏற்பட்ட அந்த மாத விலக்கினுடைய வரம்,சாபம் வரலாறு இதுதான் .இது ஒரு தீட்டு என்று சொல்கிறார்களே என்ன காரணம் என்றால் இந்த காலத்தில் வந்து அது இணைந்து கொண்டதால் அது ஒரு தீட்டு என பெரியோர்கள் நமக்கு சொல்லி               இருக்கிறார்கள் .

இது தெய்வத்திற்கும் தொடர்புடையது என்றால் ஆம் ,அம்பிகையின் சக்தி பீடங்கள் என்று எடுத்து கொண்டோம் என்றால் அதில் அஸ்ஸாம்-ல் உள்ள யோனி சக்தி பீடமாக விளங்க கூடிய கமாக்கிய என்ற ஆலயம் .இந்த ஆலயத்தில் அதி அற்புதமான அதிசயமிக்க ஒரு செயல் வருடம் தோறும் நடைபெற்று கொண்டிருக்கிறது வருடத்திற்கு 3 முதல் 4 நாட்கள் வரை ( எப்படி மாதவிலக்கின் போது உதிர போக்கு ஏற்படுமோ ) அதேபோல அம்பிகைக்கும் ஏற்படுகிறது என்று இந்த ஊர் மக்கள் கதவடைத்து திருவிழாவாக கொண்டாடி மகிழ்கிறார்கள் .இன்றைக்கும் இந்த உலகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது .

அதேபோல் கேரளாவில் இருக்க கூடிய  செங்கநூர் பகவதி என்பது முழுக்க முழுக்க கண்ணகியின் ரூபமாக கருதப்படுகிறது ,அந்த ஆலயத்திலும் அம்பிகைக்கு உதிரப்போக்கு ஏற்படகூடிய அந்த காலத்தையும் மக்கள் மிகுந்த பக்தியோடு கொண்டாடி மகிழ்கிறார்கள் என்ற வரலாறும் உண்டு .இப்படி இறைவனோடு தொடர்புடைய ஒன்றும் புராணத்தோடு தொடர்புடைய ஒன்றும் ஒரு தீட்டு ,இது ஆகாது ,எது கூடாது என்று பெரியோர்கள் சொல்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம் என்று நாம் யோசித்து பார்க்க வேண்டும் .

கோவிலுக்கு போகக்கூடாது என்றார்கள் ஏன் , அந்த காலத்தோடு ஒப்பிட்டு பார்த்தீர்கள்  என்றால் இப்போது இருக்கின்ற மாதிரி அப்போது அதி நவீனமான வாழ்க்கை கிடையாது . நம்முடைய அம்மா காலத்திலும் ,பாட்டி காலத்திலும் யோசித்து பாருங்கள் ,இப்போது நம்முடைய காலத்தையும் யோசித்து பாருங்கள் அவர்கள் பயன்படுத்திய உடைகள் ,அவர்கள் பயன்படுத்திய பாதுகாப்பு சாதனங்கள் எல்லாமே ரொம்ப குறைந்த அளவே இருந்தது .ஆனால்  இன்றைக்கு அப்படி கிடையாது இப்போது எல்லாம் தலைகீழாக மாறி விட்டது .

அந்த காலத்தில் அந்த நிலைக்கு எடுத்த முடிவு தான் இது .ஒரு பெண் இந்த காலத்தில் மிகவும் சுத்தமாக இருக்கனும் ஏனென்றால் இந்த உதிர போக்கு காலத்தில் இன்பெக்சன் அதிகமா ஏற்பட்டால் நோய் தொற்று ஏற்படும் .அதில் இருந்து அவர்கள் மீள்வது என்பது மிகவும் கடினம் அதனால் ரொம்ப சுத்தமாக இருக்க வேண்டும் என்று அவளை தனிமை படுத்தினார்கள் .அதேபோல் அந்த நேரத்தில் அவளுக்கு நல்ல ஓய்வு இருக்க வேண்டும் என்பதற்காகவும் பெண்ணை தனிமை படுத்தி வைத்திருந்தார்கள் .

இந்த தனிமை  படுத்துதல் என்பதில் நிறைய நல்ல விசயங்களை பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள் .கோவிலுக்கு போகக்கூடாது ,எதையும் தொடக்கூடாது ,அடுப்படிக்கு வரக்கூடாது ,ஆகாது ,தீட்டு என்று சொன்னார்களே என்றால் இது எல்லாம் விஞ்ஞானமும் சார்ந்தது .அது என்ன விஞ்ஞானம் சார்ந்தது என்றால் ,வீட்டில் ஒரு பெண் 3 நாளோ ,4 நாளோ தனிமையில் அமர்ந்து இருக்கின்ற போது நல்ல ஓய்வு கிடைக்கிறது .இந்த மாதவிடாய் காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் இருந்து அதிகமான வெப்பம் வெளியேறும் ,குளித்தால் கூட அது அதிகப்படியான உதிரப்போக்கை ஏற்படுத்தும் என்பதால் 3 , 4 நாள் தலைக்கு குளிக்காமலேயே ஒரே இடத்தில் உட்கார வைத்து விடுவார்கள் .

ஒரே சீரான வெப்ப நிலையில் அவள் உடல் இருக்க வேண்டும் என்பதற்காக ,இந்த வெப்பம் அதிகமாகின்ற போது எந்த பொருளை தொட்டாலும் அந்த பொருளில் தொற்று ஏற்படும் என்பதால் .இதை இன்னும் விளக்கமாக சிந்திக்க வேண்டும் என்றால் ,நம்முடைய உடல் பஞ்சமய கோஷங்களால் இயங்கி கொண்டிருக்கிறது . 1.அன்னமய கோசம் , 2.பிராணமய கோசம் , 3.மனோன்மய கோசம் , 4.விஞ்ஞானமய கோசம் , 5.ஆனந்தமய கோசம் ,என்கின்ற ஐந்து கோசங்களினால் நம்முடைய ஆற்றல் இயக்கப்படுகிறது .அதற்கு உதவுவது எது என்றால் தச வாயுக்கள் .அதாவது 10 வகையான வாயுக்கள் நம்முடைய உடம்பை இயக்கி கொண்டிருக்கிறது .

அதில் குறிப்பாக இரண்டு வாயுக்கள் உண்டு 1.பிராணன் , 2.அபானன் ,பிராணன் என்பது மேல்நோக்கி செல்ல கூடியது ,அபானன் என்பது கீழ்நோக்கி செல்ல கூடியது .இந்த மாதவிடாய் காலத்தில் அபானன் என்ற வாயு நம்முடைய உடலில் அதிகமான செயல்பாட்டில் இயங்கி கொண்டிருக்கும் .பிராணன் என்ற வாயு குறைவாக செயல்படும் .அதனால் தான் மாதவிடாய் காலத்தில் எந்த வேலை செய்தாலும் உடனே உடல் சோர்வு ஏற்படுகிறது .

அதே போல் கோவிகளில் பார்த்தோம் என்றால் பிராண சக்தி மிக அதிகமாக இருக்கும் அதனால் ஆலயத்தில் இறைவனுடைய திருஉருவத்தை வைப்பதற்கு முன்னாள் கீழே எந்திரங்கள் வைத்து ,அந்த எந்திரங்களில் மந்திரங்களை உருவேற்றி அதன்முலமாக அதீத பிராண சக்திகளை ஈர்க்கும் வகையில் தகடுகளை பதிகின்றனர் .அது மட்டும் அல்லாமல் ஆலயத்தின் கோபுரங்களை பிரமிடு வடிவத்தில் அமைத்து மேலே செப்பு கலசங்களை வைக்கிறார்கள் .அப்போது ஆலயத்திற்கு உள்ளே அதீதமான பிராண சக்தி எப்போதும் இயங்கி கொண்டிருக்கும் .

அப்போது எதிர்மறையான அபானன் நாம் செயல்படுகின்ற நேரத்தில் அங்கு நிற்கின்ற போது இந்த பிராண சக்தி நம் உடலுக்கு உள்ளேயும் செல்லாது ,அபான சக்தி மேலும் அதிகப்படுத்தி கொண்டே இருக்கும் இந்த எதிர்மறை விளைவுகள் நம்முடைய உடலில் சில நோய்களை ஏற்படுத்தலாம் என்ற காரணத்தினாலும் அந்த காலத்தில் முன்னோர்கள் இந்த நாட்களில் கோவிலுக்குள் வராமல் இருப்பது நல்லது என்ற முறையிலேயும் இதை சொல்லி இருக்கிறார்கள் .

இதில் இன்னொரு விசயமும் இருக்கிறது ,ஒரு பெண் அந்த நேரத்தில் மிகவும் புனிதத்துவம் வாய்ந்தவளாக இருக்கிறாள் .மிக புனிதமாக இருக்கும் அந்த பெண் அங்கே போய் நின்று அந்த சக்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது .அதே போல் அந்த பெண்ணை 3நாள் , 4நாள் ஒரே இடத்தில் உட்காரவைத்து ஒரு தெய்வத்தை ஆராதிப்பது போல இருக்க செய்ததை தான் ,இன்று நாம் தீட்டு ,ஆகாது என்று சொல்லி ஒதுக்கி வைத்து விட்டோம் .

இது ஒதுக்கப்படக்கூடிய விசயம் அல்ல ,புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விசயம் .அந்த நேரத்தில் ஒரு பெண் மிகவும் புனிதத்துவத்தை பெறுகிறாள்,எனவே அந்த புனிதத்துவத்தை தக்க வைத்து கொள்வதற்கான நியதியைதான் நம்முடைய முன்னோர்கள் நமக்கு சொல்லி இருக்கிறார்கள் .இது மாதிரி நாம் இருந்தோம் என்றால் நமக்கு நன்மை தரும் என்று சொல்லி வைத்த மிகவும் முக்கியமான விசயங்கள் .இது ஒரு சாபம் அல்ல புனிதமான ஒரு வரம் . 

 

பெண்கள் கர்ப்ப காலத்தில் ,மாதவிடாய் காலத்தில் சூரிய நமஸ்காரம் செய்யலாமா ?..

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது 3 மாதம் , 5 மாதம் , 7 மாதம் இதில் எப்போது செய்வது ,எப்போது நிறுத்துவது ,மாதவிடாய் காலங்களில் செய்யலாமா, செய்யக்கூடாத எத்தனை நிமிடங்கள் செய்வது ,எவ்வளவு நேரம் செய்வது எத்தனை நாட்கள் செய்ய வேண்டும் .பெண்கள் எப்போதும் உடலை வலிமையாக வைத்திருக்க வேண்டும் ,ஒரு பெண் எப்படி வலிமையாக ஆரோக்கியமாக இருக்கிறாளோ அதை பொறுத்துதான் அந்த குடும்பத்தின் ஆரோக்கியம் அமைந்திருக்கும் .

எப்போது ஒரு பெண் சோர்வடைந்து போகிறாள் என்றால் மாதவிடாய் காலத்தில் ,நிறைய பேர் இதை தீட்டு ,ஆகாது இது ஒரு சாபம் என்று சொல்வார்கள் ,இந்திரனிடத்தில் இருந்து பிரித்து அளிக்கப்பட்ட சாபத்தில் ஒரு பங்கு பெண்களுக்கு மாதவிடாயாக தரப்பட்டது ,இது வரலாறு ரீதியாக ,புராண ரீதியாக சொல்லப்படுகிறது .

அது ஒரு சாபம் என்று தான் நினைக்கிறோமே தவிர சாபத்தோடு கூடிய வரம் என்பதை நிறைய பேர் மறந்து விடுகிறார்கள் .அந்த சாபம் கொடுத்த பிறகு அதோடு சேர்ந்து ஒரு வரமும் பெண்களுக்கு கிடைத்தது .இந்த சாபம் இருக்கின்ற காரணத்தினாலே பெண்கள் மட்டும் கருவுற்று இந்த உலகிற்கு ஒரு உயிரை தரக்கூடிய ஆற்றலை பெறுவாள் என்ற வரம் பெண்களுக்கு மட்டும் தான் கிடைத்திருக்கிறது. ஆகவே இதை துன்பத்தோடு கூடிய இன்பம் என்று நாம் எடுத்து கொள்ள வேண்டும்.

இந்த மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கிறது. உடற்பயிற்சி அன்றாடம் செய்து பழக்கம் உள்ளவர்கள் தாராளமாக மாதவிடாய் காலத்திலும் செய்யலாம் ,என்ன செய்ய கூடாது என்றால் மிக மிக கடினமான உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது .உடலை வருத்தி கொண்டு செய்ய கூடாது சூரிய நமஸ்காரம் மாதவிடாய் காலத்தில் செய்யக்கூடாது ,ஏனென்றால் அது வெறும் உடற்பயிற்சி மட்டும் அல்ல மிகவும் கடினமானது எனவே கண்டிப்பாக மாதவிடாய் காலத்தில் சூரிய நமஸ்காரம் செய்யக்கூடாது .

அதேபோல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சூரிய நமஸ்காரம் செய்வதை தவிர்த்து விடுங்கள் .பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போதும் மாதவிடாய் காலத்திலும் எளிமையாக இருக்க கூடிய உடற்பயிற்சிகளை செய்தால் போதும் .

இது எல்லா பெண்களின் உடம்புக்கும் ஒரே மாதிரி தானா என்றால் கிடையாது மருத்துவர்கள்  கர்ப்பமாக இருக்கும் சில பெண்களை நடை பயிற்சி செல்ல வேண்டும் என்பார்கள் ,சில பெண்களை செல்ல கூடாது என்பார்கள் ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணின் உடல் அமைப்பும் வேறு வேறாக இருக்கும் .என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்ற விதிமுறை இருக்கிறது .அந்த விதிமுறைக்கு உட்பட்டு என்னவெல்லாம் செய்யலாம் ,என்னவெல்லாம் செய்யக்கூடாது என  நம்முடைய  உடல்நிலையோடும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் .

உடலுக்கு ஓய்வு என்பது மிக மிக அவசியம் ,அதனால் அந்த காலத்தில் முன்னோர்கள் முட்டாள்தனமாக எதையும் சொல்ல வில்லை நன்றாக யோசித்து தான் சொல்லி இருக்கிறார்கள் .முடியாதவர்கள் நன்றாக ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் ,எங்களால் செய்ய முடியும் என்பவர்கள் மட்டும் சின்ன சின்ன விசயங்களை செய்யலாம் .

சூரிய நமஸ்காரம் காலையில் செய்ய முடியாதவர்கள் மாலையில் செய்யலாமா என்றால் தாராளமாக செய்யலாம் 6 மணிக்கு .சூரிய நமஸ்கராமும் சரி ,மற்ற உடற்பயிற்சிகளும் சரி ஒரு நிலையில் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் ,சூரிய நமஸ்காரம் செய்யும் போது 12 ஆசனங்களையும் குறைந்தது 5 என்னுகின்ற வரைக்கும் நிறுத்தி செய்ய வேண்டும் அப்போது  தான் ஒவ்வொரு ஆசனமும் உங்கள் மனதில் நன்றாக பதியும் ,அதன் பிறகு என்னுகின்ற எண்ணிக்கையை குறைத்து கொள்ள வேண்டும் .

அதேபோல் நாளாக நாளாக உங்கள் வேகத்தை குறைத்து கொண்டே வந்தால் இது மிகவும் நல்ல பலனை தரும் ,அதேபோல் மூச்சு விடுகின்ற போது சாதாரணமாக தான் விட வேண்டும் . இதே போல் பெண்கள் உடலையும் உள்ளத்தையும் பேணி பாதுகாத்தோம் என்றால் எல்லா நாட்களிலும் சுறுசுறுப்பாக மகிச்சியாக ஆரோக்கியமாக இருக்க முடியும் .

 

குறைதீர்க்கும் சப்தமாதர்கள் …..

மகிஷாசுரன் ஒரு கொடிய அசுரன் ,அவன் பிரம்மனை நோக்கி தவமிருந்தான் அவரிடம் இருந்து பல வரங்களை பெற்றான் .தேவர்களை துன்புறுத்தினான் தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட ,அவன் ஒரு பெண்ணால் மரணமடைவான் என சபித்தார் பிரம்மா .பின்னர் பிரம்மா பராசக்தியிடம் பிரார்த்தனை செய்தார் .பராசக்தி தன் உடலில் இருந்து பிராமி ,வைஷ்ணவி ,இந்திராணி ,மகேஸ்வரி ,கவுமாரி ,வராகி என ஆறு தேவிகளை தோற்றுவித்தார் .ஆறுபேரும் மகிஷனுடன் போரிட்டனர் அவனை வெல்ல இயலவில்லை .கோபம் கொண்ட சிவபெருமான் தன் நெற்றி கண்ணில் இருந்து பத்ரகாளியை தோற்றுவித்தார் .

பத்ரகாளின் தோற்றத்தை கண்டா பார்வதி அவளை சுயரூபம் கொள்ளும்படி செய்தாள் அவளே சாமுண்டி , அவள் பார்வதியை பணிந்து அசுரனை அழிக்க அருள்புரியும்படி வேண்டி நின்றாள் .பார்வதி உனக்கு என் அருள் என்றும் உண்டு ,நீயே இந்த ஆறு பேருக்கும் தலைவியாக இருந்து அசுரனை அழிப்பாய் ,இந்த உலகை காப்பாய் ,இனி நீங்கள் ஏழு பேரும் சப்தமாதர் என அழைக்கப்படுவீர்கள் என அருளினாள் .

பின் இவர்களை எதிர்க்க ரக்த பீஜன் என்பவன் வந்தான் ,அவனுடன் சப்தமாதாக்கள் போர் புரிந்தனர் ,அவன் சிந்திய ரத்தம் முழுவதையும் சாமுண்டி பருகினால் .அவன் ரத்தம் வற்றியது ரக்த பீஜன் வதம் முடிவுக்கு வந்தது .சப்தமாதர்களை பாதாள உலகிற்கு அனுப்பிவிடுமாறு பைரவருக்கு சிவபெருமான் கட்டளை இட்டார் .சப்தமாதர்களுக்கு கடும் பசி ,எனவே அவர்கள் அங்கு கண்ணில் பட்டத்தை எல்லாம் எடுத்து உண்டார்கள் ,நரசிம்மர் இதை கண்டார் ,அவர் சப்தமாதர்களின் தீய குணங்களை எல்லாம் தான் எடுத்து கொண்டார் .அவர்களை கருணை காட்டும் தெய்வங்களாக மாற்றினார் .

இப்படிப்பட்ட சப்தமாதர் ஆலயம் துறையூருக்கு வடக்கே அன்னை  நல்ல காவத்தாயம்மன் ஆலயம் என்ற பெயரில் அமைந்துள்ளது .ஆலயம் வடக்கு நோக்கி இருக்கிறது ,முகப்பை கடந்ததும் நீண்ட பிரகாரம் ,அடுத்து மகா  மண்டபம் , மகா மண்டபத்தின் வலது புறம் விநாயகர் ,முருகன் திருமேனிகள் உள்ளன .

திருச்சுற்றின் மேற்கு பகுதியில் அய்யனார் ,ராமர் ,லட்சுமணன் ,சீதை ,அனுமன் திருமேனிகள் உள்ளன .அர்த்த மண்டபத்தின் அடுத்துள்ள கருவறையில் சப்தமாதர்கள் வடக்கு திசை நோக்கி வரிசையாக அமர்ந்த நிலையில் அருள்              பாலிக்கின்றனர் ,இந்த ஆலயம் 400 ஆண்டுகள் பழமையான ஆலயம் .வண்ண வண்ண உடைகளில் இந்த சப்தமாதர்களை தரிசனம் செய்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் .தன் குல மக்களை மட்டுமின்றி தன்னை நாடி வரும் அனைவரின் குறைகளையும் தீர்த்து அவர்களை வளமுடன் வாழ வைப்பதில் இந்த சப்தமாதர்களுக்கு நிகரில்லை என்பது பக்தர்களின் நம்பிக்கை .

பிராமி }…  பிராமி படைப்பின் கடவுளான பிரம்மாவின் அம்சமாவார் ,இவர் நான்கு கரங்களை உடையவர் அன்னப்பறவையை வாகனமாக கொண்டவர் ,வெண்ணிற ஆடை அணிந்தவராகவும் ,ஸ்படிக மாலையை ஆபரணமாகவும் கொண்டுள்ளார் .

மகேஸ்வரி ]… மகேஸ்வரி என்பவர் மகேசுவரனாகிய  சிவபெருமானின் அம்சமாவார் ,இவர் சிவபெருமானை போன்று முக்கண்ணும் ,ஐந்து திருமுகமும் உடையவர் ,கரங்களில் பாசம் ,அங்குசம் ,மணி ,சூலம் ,பரசு என்ற ஐந்து ஆயுதங்களை கொண்டும் ரிசபத்தினை வாகனமாகவும் கொண்டுள்ளார் .

கௌமாரி }… கௌமாரி என்பவர் கௌமாரனாகிய முருகனின் அம்சமாவார் ,இவர் நான்கு கரங்களையும் ,பின் இரு கைகளில் வஜ்ரம் மற்றும் சக்தி ஆயுதங்களையும் தரித்து காணப்படுகிறார் .மயில் பறவையை வாகனமாக கொண்டவர் ,சேவல் கொடியினை கைகளில் தாங்கி இருக்கிறார் .

நாராயணி }… நாராயணி என்பவர் விஸ்ணு என்று அழைக்கப்பெறும் திருமாலின் அம்சமாவார் ,இவருக்கு வைஷ்ணவி என்ற மறுபெயர் உண்டு , இவர் நான்கு கரங்களையும் ,பின் இரு கைகளில் சக்கரத்தினையும் ,சங்கினையும் தரித்து காணப்படுகிறார் .

வராகி }… வராகி திருமாலின் வராக அம்சமாவார் ,இவர் வராகமெனும் பன்றி முகமும் ,நான்கு கரங்களையும் உடையவர் ,பின் இரு கரங்களில் தண்டத்தினையும் ,கலப்பையையும் கொண்டவர் ,இவர் கருப்பு நிற ஆடை உடுத்தி சிம்மம் வாகனத்தில் அமர்ந்திருக்கிறார் .

இந்திராணி }… இந்திராணி தேவலோகத்து அரசனான இந்திரனின் அம்சமாவார் ,நான்கு கரங்களை கொண்ட இவர் பின் இரு கைகளில் சக்தியையும் ,அம்பினையும் ஆயுதமாக கொண்டு காட்சியளிக்கிறார் ,இரத்தின கிரீடம் தரித்து வெள்ளை யானை வாகனத்தில் அமர்ந்திருப்பார் .

சாமுண்டி }… சாமுண்டி என்பவர் ருத்ரனின் அம்சமாவார் ,நான்கு கரங்களும் ,மூன்று நேத்திரங்களும் ,கோரைப்பற்களும் ,கருப்பு மேனியும் உடையவர் .இவர் புலித்தோல் உடுத்தி கபால மாலையை அணிந்திருக்கிறார் .முத்தலை சூலம் ,முண்டம் ,கத்தி கபாலம் ஆகிய ஆயுதங்களை தரித்தும் ,பிணத்தின் மீது அமர்ந்தும் காட்சியளிக்கிறார்.

 

உன் வாழ்வில் நீ விதைத்த விதை அது எதுவாயினும் 

உனக்காக நிர்ணயிக்கப்பட்டது .

உன் முடிவு ,நல்லவையானாலும் சரி ,

தீயவையானாலும் சரி , எதுவாக இருந்தாலும் அது 

உன்னை வந்து அடைந்தே தீரும்  எந்த பிறவியிலும் .

 

ஓம் நமசிவாய …..


தொடரும் ………

Leave a Comment

Write and Earn with Pazhagalaam