Visitors have accessed this post 684 times.

இயற்கைப் பொருட்கள்

Visitors have accessed this post 684 times.

இயற்கை
உலகில் சிறந்த மருந்துகள் அனைத்தும் இயற்கையில் இருந்தே கிடைக்கின்றன. நாம் தான் அதை பயன்படுத்துவது  கிடையாது நமக்கு வேண்டிய அனைத்தையும் இயற்கை நமக்குக் கொடுக்கின்றது நாம் அதனை பயன்படுத்தி எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல் நம்மை காத்துக் கொள்ளலாம் .
கற்றாழை
கற்றாழை என்பது இயற்கையில் கிடைக்கும் சிறந்த ஒரு மூலிகை ஆகும். அவற்றை நாம் தினந்தோறும் பயன்படுத்திக் கொள்ளலாம் முகத்திலும் மற்றும் தலையிலும் நாம் அதை உபயோகித்துக் கொள்ளலாம் .
முகம்
கற்றாழையை தினந்தோறும் காலையில் முகத்தில் தேய்த்து நன்றாக கழுவினால் முகம் பளபளப்பாகும் சருமம் வழுவழுப்பாகவும் இருக்கும்
முகத்தில் ஏற்படும் பருக்கள் நீங்கும்  முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கின்றன இது ஒரு சிறந்த இயற்கை மருந்தாகும் இயற்கை என்பதை மறந்து செயற்கை என்னும் வாழ்க்கையில் நாம் பயணித்துக் செல்கின்றோம் .
தலை
கற்றாழையை நாம் தலையில் உபயோகிப்பதன் மூலம் தலையில் ஏற்படும் பொடுகு பிரச்சனை குறைகிறது. முடி நன்றாக வளரும் தலை முடி கொட்டுவதும் நின்றுவிடும் முடியில் ஏற்படும் கீறல்கள்  தடுக்கிறது அதுமட்டுமின்றி கற்றாழை நம் உடம்பிற்கு குளிர்ச்சி ஏற்படுத்துகின்ற  இதை நாம் உணவாக எடுத்துக் கொள்ளலாம் இயற்கையே சிறந்த மருந்தாகும். இயற்கையை பயன்படுத்தி பல பிரச்சினைகளுக்கான தீர்வை நாம் காண்போம்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam