Visitors have accessed this post 864 times.

உறவுகள் பகுதி -3 RELATIONSHIPS part-3

Visitors have accessed this post 864 times.

 

                                                 உறவுகள்    RELATIONSHIPS

 

காதலர்களுக்கு இடையேயான உறவு முறைகள் 

Relationship patterns between lovers

கணவன் மனைவிக்கு இடையேயான உறவு முறைகள்  

Relationship patterns between husband and wife

 

காதல் தோல்வியில ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டீங்களா?… அதிலிருந்து வெளியில வர இதோ வழி இருக்கு…

பொதுவாக லவ் பிரேக்அப் ஏற்பட்டால் அந்த வலியை வார்த்தைகளால் கூட சொல்ல முடியாது. நிறைய பேருக்கு ஒவ்வொரு நாளும் செல்வதே கடினமாக இருக்கும். அவர்களின் மன ஆரோக்கியம் மிகுந்த அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும். எனவே பிரேக்அப்லிருந்து வெளிவந்து உங்க பழைய வாழ்க்கையை திரும்ப பெறுவது எப்படி. உங்க வாழ்க்கையை ஒரு அர்த்தமுள்ளதாக மாற்ற இதோ சில வழிகள்.

 

காதல் ஏற்படும் போது எப்படி நாம் மென்மையாக காணப்படுகிறோமோ அதே நேரத்தில் பிரேக்அப் என்று வரும் போது மனசு உடைந்து அதிலிருந்து வெளிவர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். இங்கே நிறைய பேர் காதல் தோல்விக்கு பிறகு தங்களுடைய பழைய வாழ்க்கைக்குள் திரும்ப முடியாமல் மாட்டிக் கொண்டு தவிப்பது உண்டு. காதல் பிரேக்அப்பை சந்திக்கும் காதலர்களின் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. ஏனெனில் காதல் முறிவுகள் எல்லோருக்குமே கடினமான ஒரு விஷயம். அவை ஒரு நபரை உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பலவீனப்படுத்தக்கூடிய பலவிதமான உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன.

 

காதல் தோல்வி:

பிரிந்த பிறகு சோகமாக இருப்பது மிகவும் சாதாரணமானது என்றாலும், உங்கள் அறிகுறிகள் சில வாரங்களுக்குப் பிறகும் மேம்படத் தொடங்கவில்லை அல்லது மோசமாகிவிட்டால், நீங்கள் நிச்சயமாக ஒரு உளவியல் சிகச்சையாளரை சந்திப்பது அவசியம்.

யு.எஸ். நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, பிரேக்அப் உங்க மன துயரத்தை அதிகரிக்கிறது மற்றும் வாழ்க்கை திருப்தியில்லாமல் போகிறது என்று கூறுகிறது.

 

எப்படி வெளியில் வருவது?

எனவே இந்த இக்கட்டான காதல் பிரேக்அப் தருணங்களில் இருந்து நீங்கள் மீண்டும் எப்படி உயிர்த்தெழ முடியும். இதுவரை உங்களுக்கு விருப்பமான ஒரு நபரை விரும்பிய நீங்கள் இனி மேல் உங்கள் மீது நீங்களே அன்பு காட்டுவது எப்படி, உங்களை முதலில் ஸ்பெஷலாக நினைப்பதே இந்த கஷ்டமான சூழ்நிலையில் இருந்து உங்க மனநிலையை மாற்ற உதவி செய்யும்.

அப்படி உங்க மனநிலையை மாற்ற இந்த எளிதான 3 விஷயங்கள். இது காதல் தோல்வியில் இருந்து உங்களை புதிய வாழ்க்கைக்கு கொண்டு செல்ல உதவியாக இருக்கும்.

 

உங்க தினசரி நாளை நன்றாக தொடங்குங்கள்:

காதல் பிரிவு ஏற்பட்ட பிறகு எல்லாருக்குமே மன ஆரோக்கியம் என்பது பாதிக்கப்படும். இது உங்களிடையே கோபம், விரக்தி, அழுகை, தூக்கமின்மை மற்றும் அன்றாட நடவடிக்கைகளில் ஆர்வம் இழப்பு உள்ளிட்ட பல்வேறு உணர்ச்சிகளின் வடிவத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும் . சில நேரங்களில். அறிகுறிகள் பெரிதாக இருக்கலாம். நீங்கள் எப்போதுமே சோகமாகவும் நம்பிக்கையற்ற ஒருவராகவும் உணர வாய்ப்புள்ளது. இப்படி மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டு உடலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. உடல் எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு, தேவையில்லாத டென்ஷன் போன்றவற்றை நீங்கள் சந்திக்கலாம். எனவே உங்க மன ஆரோக்கியத்தை மேம்படுத்த சில விஷயங்களை செய்வது மிகவும் அவசியம்.

 

நண்பர்கள் ஆதரவு:

உங்கள் நெருங்கிய குடும்பத்தினரையும் நண்பர்களையும் அணுகுவதன் மூலம் உங்கள் கவலைகளை நீங்கள் எளிதாக்க முடியும். உங்களை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் நேர்மறையான நபர்களை உங்களைச் சுற்றி வையுங்கள். முடிந்த வரை உங்க மன ஆரோக்கியம் மேம்படும் வரை எதிர்மறையான நபர்களிடம் இருந்து விலகி இருங்கள். ஒரு இரவு விருந்து, நண்பர்களுடன் மூவி, வேடிக்கை விளையாட்டுகள் போன்றவற்றில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் உங்க மனதை பிரேக்அப் போன்ற கசப்பான தருணங்களில் இருந்து தள்ளி வைக்க முடியும்.

 

புத்தகமும் இசையும்:

இது போன்ற கடினமான காலங்களில் உங்க மன ஆரோக்கியத்தை மேம்படுத்த கார்டினல் விதி என்ன கூறுகிறது என்றால் கடந்தகால நினைவுகளை ஆராய்வதைத் தவிர்ப்பது நல்லது என்கிறது. அவ்வப்போது ஒரு குற்றப் பயணத்தை மேற்கொள்வது, கடந்தகால நினைவுகளுக்குள் நாம் எவ்வளவு அதிகமாகச் செல்கிறோமோ அவ்வளவு கவலையான எண்ணங்களால் நம் மூளை நிரப்பப்படும்.

 

அதற்கு பதிலாக, புதிய பழக்கங்களை உருவாக்க உங்கள் மூளையை முயற்சி செய்து மாற்றியமைக்கும் இது நேர்மறையான வாழ்க்கை முறைகளை உருவாக்க உங்களுக்கு உதவும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

 

எதிர்மறை உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கலை ஒரு சிறந்த வழியாகும். இசையில் ஈடுபடுங்கள், நடனம், இலக்கியம், பாடல், கவிதை ஆகியவற்றை ஆராயுங்கள் அல்லது புதிய சிந்தனை செயல்முறைகளால் உங்கள் மனதை நிரப்ப புத்தக வாசிப்பில் கவனம் செலுத்துங்கள்.மேலும் கடந்த கால நிகழ்வுகளால் விரக்தியடைவதற்குப் பதிலாக உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உங்களை நீங்களே விரும்புங்கள்.

 

சுய பராமரிப்பு மேற்கொள்ளுங்கள்:

‘லிவ்-இன்’ ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் சாதக – பாதகங்கள் என்ன? தெரிஞ்சிக்கிட்டு முடிவெடுங்க…

திருமணமாகாமலயே ஒன்றாக வாழும்போது அதை கசந்திடாமல் காக்க நேர்மை, நம்பிக்கை, புரிந்துணர்வு என அனைத்தையும் பேணிட வேண்டும். திருமணம் தரும் முன்பாகவே இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு பெரும் முடிவு எடுப்பது மிகவும் கடினமானது.

ஒரு ஆணும் பெண்ணும் காதலுக்குள் இருப்பது அவ்வளவு சுலபமல்ல. காதல் வலுவாக அமைய அதற்கு முக்கிய தேவை நேரம். இருவரும் நிறைய நேரத்தை ஒன்றாக செலவிட விரும்புவார்கள். அதுதான் ஒருவருக்கொருவரின் எதிர்பார்ப்பாகவும் அதிகம் இருக்கும் ஆனால் அவர்களுக்கு இருக்கும் மற்ற வேலைபளுக்களுக்கு நடுவில் அனைத்து விஷயங்களுக்கும் சரியானபடி நேரத்தை பங்கிடுவது என்பது சவாலானது.

 

​பெரும் சவால்:

உங்கள் இணையர், குடும்பம், வேலை, நட்பு வட்டம் என அனைவருக்குமே நேரத்தை ஒதுக்கி சரியாக கையாள்வது என்பது ஒரு பெரும் கலை. அந்த நேரத்தை இன்னும் அதிகம் மிச்சம் செய்து ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்துகொள்ள இன்றைய இளையவர்களில் சிலர் தேர்ந்தெடுப்பது ”லிவிங் டு கெதர்”. ஆனால் ”லிவிங் டு கெதர்” என்னும் திருமணத்திற்கு முன்பாகவே ஒன்றாக இணைந்து வாழ்தல் என்பது அதைவிட சவால் நிறைந்தது என்பது அவர்களுக்கு பிறகு தான் தெரியவும். சொல்லப்போனால் நேரில் சந்தித்துக்கொள்ளாமலயே காதலிப்பதை போல் ’லிவிங் டு கெதரிலும்’ சவால்கள் பல உள்ளது.

 

லிவ்- இன் வாழ்க்கை:

திருமணமாகாமலயே ஒன்றாக வாழும்போது அதை கசந்திடாமல் காக்க நேர்மை, நம்பிக்கை, புரிந்துணர்வு என அனைத்தையும் பேணிட வேண்டும். திருமணம் தரும் முன்பாகவே இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு பெரும் முடிவு எடுப்பது மிகவும் கடினமானது. திருமணம் என்னும் பந்தமில்லாத சூழலில் ஒளிவுமறைவில்லாமல் உண்மையாக இணைந்து வாழ்வது என்பது அதைவிட கடினமானது. இந்த கட்டுரையில் ’லிவிங் டு கெதர்’ என்னும் இணைந்து வாழ்தலில் உள்ள சாதக பாதகங்களை அலசுவோம்

 

இணைந்து வாழ்தலில் உள்ள நன்மை:

நீங்கள் உங்கள் இணையரோடு ஒன்றாக இணைந்து வாழும்போது உங்களுக்கு பொறுப்புகள் நிறைய கூடும். பெரிய பெரிய முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்கும். அதனால் நன்றாக யோசித்தே இணைந்து வாழ்வதை முடிவு செய்ய வேண்டும். உங்களுக்கு உங்கள் இணையர் மீது முழு நம்பிக்கயிருந்து நீங்கள் ‘லிவிங் டு கெதரில்’ வாழத்தொடங்கும்போது உங்களுக்கு அதில் நன்மைகளும் கிடைக்கும்

 

நீண்ட நேரம் செலவிடமுடியும்:

இணைந்து வாழ்தலில் இருக்கும் மிகப்பெரும் நன்மைகளில் முக்கியமானது நீங்கள் உங்கள் இணையரோடு ஒன்றாக இருக்க முடியும் என்பதுதான். களைத்து போய் வேலையில் இருந்து திரும்பும்போது உங்கள் வருகையை எதிர்பார்த்து வீட்டில் ஒருவர் இருப்பார் என்பதே உங்களுக்கு புதிய உற்சாகத்தை தரும். அன்றைய நாளின் நிகழ்வுகளை அவரோடு பகிர்ந்து கொள்வது என்பது, உங்கள் உறவை இன்னும் பலப்படுத்தும்.

 

உயிர்ப்பான உரையாடல்கள்:

நீங்களும் உங்கள் இணையரும் வெவ்வேறு ஊரில் இருக்கும் போது உங்களால் அலைபேசியிலோ அல்லது காணொளி காட்சி மூலமாகவோ மட்டும்தான் பேச முடியும் ஆனால் ஒன்றாக இணைந்து வாழும்போது உங்களால் அவரோடு நேரிலேயே பேச முடியும், ஒருவருக்கொருவர் ஸ்பரிசத்தை உணரந்து காதலில் திளைக்க முடியும், ஏன் ஒருவேளை ஊடல் வந்தாலும் அதை உடனுக்குடன் நேரிலேயே தீர்த்துக்கொள்ள முடியும்.

பணம் மிச்சம்:

ஒன்றாக இணைந்து வாழும்போது உங்களால் நிறைய பணத்தை மிச்சம் செய்ய முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செலவிடும் ஒவ்வொன்றிலும் ஒரு பங்கை உங்கள் இணையரிடம் நீங்கல் பெற முடியும் அதனால் உங்களது சேமிப்பு அதிகமாகும், ஏன் சொல்லப்போனால் உங்கள் எதிர்கால வாழ்க்கைக்குமே உங்கல் இருவரால் திட்டம் வகுக்க முடியும்

 

இணைந்து வாழ்தலில் உள்ள சிக்கல்கள்:

பலன்கள் இருக்கும் அதேசமயத்தில் அதில் சில சிக்கல்களும் சேர்ந்தே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எந்த கவலையுமின்றி யாராலும் எப்போதுமே இருக்க முடியாது. ஒவ்வொரு உறவு முறையிலுமே சிக்கல்கள் இருக்கின்றன. சொல்லப்போனால் அதை சரி செய்யும்பொழுதான் உங்கள் உறவு இன்னும் பலப்படும். லிவிங் டு கெதரில் உள்ள சிக்கல்களில் சில

 

​ஏமாற்றத்தை கொடுக்கும்:

ஒன்றாக நேரம் செலவிட முடியும் என்பது எந்தளவுக்கு நன்மையோ அதேயளவிற்கு அதுவே பிரச்சினையாகவும் உருமாறும். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு குணநலன் இருக்கும். அதனால் ஒரு சிலர் தங்களுடைய தனிப்பட்ட குணத்தை அதிகம் யாருடனும் பகிர்வதில்லை. அதுவும்கூட இருவருக்குள்ளும் பிரச்சினையை உருவாக்கும். அதோடு தொடர்ந்து ஒன்றாக இருப்பது ஒருவருக்கொருவர் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.

 

ஆச்சர்யங்கள் குறைந்து அலுப்பு கூடும்:

ஒன்றாக இணைந்துவாழும்போது தொடக்கத்தில் தேனிலவு போன்று இருக்கும் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக சலிக்க தொடங்கும். ஒன்றாகவே இருப்பதால் இருவரை பற்றிய எதிர்பார்ப்புகள் குறைந்து அவர்களின் அன்றாட பழக்கவழக்கம் பழகி சலித்துவிடும்

 

​சண்டைகள் அதிகரிக்கும்:

ஒன்றாக இணைந்து வாழும்போது சண்டைகள் அதிகரிக்க கூடும். புரிந்துணர்வு என்பது இல்லாமலேயே போக வாய்ப்புண்டு. இருவருக்குள்ளும் விட்டுக்கொடுத்தல் இல்லாமல் போய் மாற்றுக்கருத்துகள் ஏற்பட்டு சண்டைகள் வலுக்க கூடும். இந்த சண்டைகளினால் தான் ’லிவிங் டு கெதர்’ என்னும் ஒன்றாக வாழ்தல் பல சமயங்கள் தோல்வியில் முடிவடைகிறது.

கஷ்டமான காலங்களில் நம்பிக்கையான பார்ட்னர் எப்படி நடந்து கொள்வார்…

தற்போது ஒரு பார்ட்னருடன் உறவு கொள்ளும்போது நம்பிக்கைத் தன்மை மிகவும் அவசியம். உங்களது பார்ட்னர் உங்களிடம் அன்பு உள்ளவராக இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள சில வழிகள் உள்ளன. உறவுகளில் கஷ்டமான நேரங்கள் ஏற்படுவது இயற்கையானது. பணிச்சுமை, பிஸி, பாதுகாப்பின்மை, நம்பிக்கை சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கூட உறவுகளில் பிரச்சனை ஏற்படலாம். ஆனால் இந்த பிரச்சினைகளை நாம் கையாளும் விதமும், அதே நேரத்தில் நம் பார்ட்னருடன் பழகும் முறையும் ஒரு உறவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. இதுபோன்ற காலங்களில் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ அது உங்களுக்கான சோதனை என்று எடுத்துக்கொள்ள வேண்டும். கடினமான நேரங்களில் உண்மையிலேயே நம்பகமான பார்ட்னர் யார் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

 

உணர்வுகளுக்கு நேர்மையாக இருக்க ஊக்குவிக்கும்:

உறவுகளில் பிரச்சினையின் போது பதற்றம் அதிகரிப்பதை தடுக்க ஒருவருக்கு ஒருவர் எப்படி சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். நம்முடன் நீண்ட கால உறவை பேண வேண்டும் என்று நினைக்கும் ஒரு நபர் பிரச்சினைகளின் போது ஆழ்ந்து சிந்தித்து முடிவு எடுப்பார். ஒரு சில முடிவுகள் சங்கடத்தை ஏற்படுத்தினாலும் உண்மையாக எடுக்கப்படும் முடிவுகள் பற்றி இருவரும் உணர முடியும்

 

உங்களுடன் இணைந்து செயலாற்றுவர்:

உங்கள் பார்ட்னர் நம்பிக்கை இல்லாமல் இருக்கும்போது, கடினமான சந்தர்ப்பங்களில் முற்றிலும் மாறுபட்ட நபராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால் உங்களை நேசிக்கும் ஒருவருடன் நீங்கள் இருந்தால் உங்களது தகவல் தொடர்பு சீராக இருக்கும். இருவரும் இணைந்து முடிவெடுக்கும் ஒரு முயற்சியை உங்கள் பார்ட்னர் மேற்கொள்வார்

 

அன்பு:

உங்கள் பார்ட்னர் உங்களுடன் நம்பிக்கையுடனும், அன்புடனும் இருக்கும் போது உங்களது உறவில் மோசமான ஒரு நிகழ்வு ஏற்பட வழி வகுக்க மாட்டார்கள். அல்லது உங்களை பழிவாங்க நினைக்க மாட்டார்கள். அன்புடன் உங்களை வழிநடத்துவார்.

 

அவரது உணர்வுகளை ஒதுக்கி உங்களது கருத்துக்கு மதிப்பளிப்பர்:

நம்பிக்கையுடனான ஒரு பார்ட்னருக்கு எப்போது பேசவேண்டும் எப்போது கேட்க வேண்டும் என்று நன்றாகவே தெரியும். அவரது சொந்த பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு நீங்கள் சொல்வதை கேட்கும் திறன் கொண்டவராக இருப்பார். நீங்களிருவரும் உணர்வுபூர்வமாக இணையவும் உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தவும் இது போன்ற நிகழ்வுகள் உதவுகிறது.

 

பிரச்சினைகளைத் தீர்க்க முன்வருவர்:

நீண்ட கால உறவை விரும்பும் ஒருவர் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு இடம் கொடுத்து உறவை முறித்துக் கொள்ள விரும்ப மாட்டார். பிரச்சினைகள் உறவின் ஒரு பகுதி என்பதை அவர் உணர்ந்து அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்வார்.

 

​உங்களுக்காக இருக்கிறேன் என்பதை நினைவு படுத்துவார்:

ஒருவர் உங்களுக்காக இருப்பேன் என்று கூறினால், அவர் உங்கள் உறவில் எந்த ஒரு பிரச்சனையிலும் உங்களுடன் இருப்பார் என்று அர்த்தம். மேலும் செயல்களால் இதை அவர்கள் நிரூபிப்பார்கள்.

 

உலகத்துலயே பெஸ்ட் தம்பதிகள் நீங்களா இருக்கணும்னா இந்த விஷயங்கள மனசுல வெச்சிக்கோங்க…

எல்லா ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஆசை தான் இந்த பெஸ்ட் ஜோடி என ஊரோ வியக்கும் ஆளாக நாம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பது ஆசையாகத் தான் இருக்கும். அப்படி ஆதர்ஷ தம்பதிகளாக, புதுப்புது அர்த்தங்கள் ஃபெர்னாண்டஸ் தம்பதிகள் போல இருக்க ஏதேதோ தியாகம் செய்ய வேண்டும் என்று பயப்படாதீர்கள். அதற்காக மிகப்பெரிய மெனக்கெடல்கள் எதுவும் தேவையில்லை. நீங்கள் நீங்களாகவும் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் சில பண்புகளையும் பெற்றிருந்தாலே போதும். அவை என்னென்ன என்று தெரிந்து கொள்வோம்.

 

ஆதர்ஷ தம்பதிகள்:

மேட் ஃபார் ஈச் அதர் தாங்கள் தான் என்றும் எல்லா திருமணக்கும் பெண்ணுக்கும் தாங்கள் தான் பெஸ்ட் ஜோடியாக இருக்க வேண்டும் என்றும் நினைப்பதுண்டு. குறிப்பாக, ஆண்களைவிடவும் பெண்களுக்கு இதுபோன்ற ஆசை மிகவே அதிகமாக இருக்கும். அதனாலேயே பெண் பார்க்கும்போதோ அல்லது மாப்பிள்ளை தேடும்போதோ, இருவருமே அவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபரின் குணங்களைப் பார்ப்பது இல்லை.

 

அவர்கள் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறார்கள், முகத் தோற்றம் எப்படி இருக்கிறது, உயரமா, குள்ளமா, ஒல்லியா குண்டா இப்படித் தான் ஆராய்ச்சி செய்கிறார்கள். அதிலும் சமீபத்தில் அதையெல்லாம் தாண்டி, கார் இருக்கிறதா, சொந்த வீடு இருக்கிறதா?, மாத வருமானம் எவ்வளவு இதை தான் முதலில் கேட்கிறார்கள். இவையெல்லாம் முக்கியமான விஷயங்கள் தான். ஆனால் அதோடு திருமணம் செய்து கொள்ளப் போகும் நபரின் குணாதிசயமும் முக்கியம் அல்லவா?

 

​புரிந்துணர்வு:

வாழ்க்கை துணை அழகாக இருக்கிறாரா என்பதை மட்டும் பார்த்து, அதோடு நின்றும் விடுகின்றனர். ஆனால் அது மட்டும் போதாது என்பதை, திருமணத்திற்கு பின்னர் அனுபவத்தின் மூலம் பலரும் புரிந்து கொள்கின்றனர். இருவரும் ஒருவருக்கொருவர் எதிரெதிர் குணங்கள் இருப்பதையோ ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாமல் போவதற்கான காரணங்களையோ பின்னால் தெரிந்து கொண்டு என்ன பயன். அதனால் ஒருவரையொருவர் பொறுமையாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அவசரப்பட்டு அரைகுறையாக ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ளாதீர்கள்.

 

தோற்றக்காரணங்கள்:

நம்மில் பலர் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது செய்யும் பெரிய தவறு, நம் வாழ்க்கைத் துணை அழகாக இருக்கிறாரா என்பதை மட்டும் பார்ப்பது தான். ஆனால் மற்ற நல்ல அம்சங்கள் மற்றும் அவர்களின் இதர குணங்களை கவனிப்பதில்லை. அதற்காக வாழ்க்கைத் துணையின் தோற்றத்தை மட்டும் பார்த்து, இவர் தான் உங்களுக்கு ஏற்றவர் என்று கூறுவது தவறல்ல. ஆனால் அது மட்டுமே போதும் என்று நினைப்பதுதான் தவறு. எனவே வெறும் வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து எப்போதும் வாழ்க்கை துணையைத் தேடக்கூடாது.

 

அன்பை மட்டும் வெளிப்படுத்துங்கள்:

நீங்கள் நீங்களாக இருக்கும் போதே, உங்களை விரும்பினால், அது வாழ்க்கை துணையின் நல்ல பண்பாகும். ஏனெனில் சிலர் தன் வாழ்க்கைத் துணை நல்லதை செய்தால் மட்டுமே விரும்புவார்கள். தங்கள் வாழ்க்கை துணையின் மற்றொரு முகத்தை காண அவர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் இதுவே நல்ல பண்புள்ள வாழ்க்கை துணையாக இருந்தால், நீங்கள் எப்படிபட்டவராக இருந்தாலும் உங்களை விரும்புவதோடு, கஷ்ட காலங்களில் உங்களுக்கு தோள் கொடுப்பார். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது என்பது வேறு, இருவரும் ஒருவருக்கொருவர் தங்களையே மாற்றிக் கொள்வது என்பது வேறு. இரண்டுக்குமான வித்தியாசங்களை நன்கு புரிந்து கொண்டு செயல்படுங்கள்.

 

தேவையில்லாத வாக்குறுதிகள் வேண்டாம்:

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுபவராக இருக்க வேண்டும். அது தொலைபேசியில் அழைப்பதாகட்டும் அல்லது வெளியில் அழைத்து செல்வதாகட்டும், சின்ன வேலையாக இருந்தாலும் கொடுத்ததை நிறைவேற்ற வேண்டும். ஒருவேளை கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாவிட்டால், அதற்கான பொறுப்பான காரணத்தை தெரிவிப்பவராக இருக்க வேண்டுமேயொழிய, சிறு பிள்ளைத்தனமான காரணத்தைக் கூறமாட்டார்கள்.

 

வளர்ச்சியில் பெருமிதம் கொள்வது:

உங்களுடைய வளர்ச்சியை நன்றாகப் புரிந்து கொள்பவர் யாரோ அவர்தான் சிறந்த வாழ்க்கைத் துணையாகவும் இருக்க முடியும். புரிதல் குடும்ப உறவை மீறி, உங்களின் அலுவலக முன்னேற்றத்திலும் கூட இருப்பது தான் மிக முக்கியம். மேலும் உங்களின் வெற்றியை அவருடைய சாதனையாக நினைக்கும் மனோபாவம் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், உங்களின் வெற்றிக்கு உங்களை ஊக்கப்படுத்துபவராக இருக்க வேண்டும்.

 

காதலை கொட்டித்தீருங்கள்:

நேரம், காலம் பார்க்காமல் எப்போது தோன்றுகிறதோ அந்த சமயங்களில் கூச்சமில்லாமல் தன்னுடைய காதலை தெரிவிப்பவராக இருக்க வேண்டும். ஒரு நல்ல வாழ்க்கைத்துணை தான் செய்யும் தவறை ஒத்துக்கொள்பவராக இருப்பார்கள். ஆனால் பலரோ தான் செய்யும் தவறுக்கு தன்னுடைய துணை காரணம் என மாற்றிவிடுவார்கள். இது மிகவும் தவறான விஷயம்.

முதலில் நடந்து போன விஷயத்தை பற்றி யோசிக்காமல் உங்களை பற்றி சிந்தியுங்கள். உங்க குறிக்கோளை திட்டமிடுங்கள். அதை நோக்கி செயல்பட முயலுங்கள். ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு உங்கள் உடல் வலிமையைப் பராமரிக்கவும் உதவும். அதே நேரத்தில் தியானம் என்பது உங்கள் உள் அமைதியைக் கண்டறிய உதவி செய்யும். மனக்கவலையை போக்க இயற்கையுடன் கூடிய ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம். வேறு எவருக்கும் முன்னுரிமை கொடுப்பதை விட்டு விட்டு உங்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுங்கள்.

உங்கள் கணவருக்கு எப்போதும் பிடித்த காதலியாக இருப்பது எப்படி?

திருமணம் ஆன உடனே, அனைத்து ரொமான்ஸ்களும் முடிவடைந்து விடுவதாக தம்பதியினர் நினைக்கின்றன. அது தவறான விசயம் ஆகும். கணவன் – மனைவி ஆக இருந்தாலும், கணவருக்கு பிடித்த காதலியாக எப்படி இருப்பது என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை..

அந்தந்த நாளின் அன்றாட பொறுப்புகள், தம்பதிகளின் மனதினில் சோர்வினை உண்டாக்கி விடுகின்றன. இது உங்கள் மண வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களை ஏற்படுத்தவும் காரணமாக அமைந்துவிட வாய்ப்பாக உள்ளன. இவர்களால் சின்ன சின்ன விசயங்களுக்கும் நேரம் ஒதுக்க இயலாமல் போவதுதான் உச்சகட்ட கவலை ஆகும்.

 

திருமணம் ஆன புதிதில் அதீத ரொமான்ஸ் உணர்வுடன் திகழும் தம்பதிகள், நாட்கள் செல்ல செல்ல அவர்களின் ரொமான்ஸ் உணர்வு குறைவதை காணலாம். உங்கள் கணவர், தனது காதல் வாழ்க்கையில் திளைத்து இருக்கும் நேரத்தில், மனைவி காதலி ஆக மாறி அவரை மகிழ்விக்க வேண்டும். காதலர்களாக இருந்த நேரத்தில், இருந்ததுபோலவே, தற்போதும் மனைவி, சிறந்த காதலி ஆக திகழ்வது எப்படி என்று இங்கு விரிவாக காண்போம்…

 

கணவரை கவர முயலுங்கள்..

கணவருக்கு என்ன பிடிக்கும் என்பதை நினைவுபடுத்தி பாருங்கள். டேட்டிங் நிகழ்வின் போது அவர் பகிர்ந்து கொண்ட விசயங்களின் மூலம், அவருக்கு பிடித்தமானவைகள் குறித்து நாம் தெரிந்துகொள்ள முடியும். அவருக்கு எந்த பிளேவர் கொலோக்னி பிடிக்கும். எந்த வகை வாட்ச் பிடிக்கும் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும். அவரைப்பற்றி நீங்கள் நேசித்த குணங்கள் மற்றும் விசயங்களில் கவனம் செலுத்தினால், அவரது பார்வை உங்களை நோக்கி இருக்கும். இது உங்களை அவர் குறித்து நன்றாக உணர வைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த பண்புகள், உங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்தவைகளாக இருக்கும்.

 

அடிக்கடி பாராட்டுங்கள்…

காதலர்களாக இருக்கும்போது ஒவ்வொரு விசயத்தையும் பாராட்டும் அவர்கள், திருமணத்திற்கு பிறகு, எதிர்மறை எண்ணங்களால் அதிகம் பிளவுபடவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன. திருமணத்திற்கு பிறகும், கணவரிடம் உள்ள நல்ல குணங்களை அவ்வப்போது பாராட்டிக் கொண்ட இருக்க வேண்டும். அவர் சமைத்தால், அந்த உணவு எப்படி இருந்தாலும், அவரை பாராட்டுவதை எப்போதும் கைவிடக் கூடாது. அவர் அணியும் சட்டைகளின் டிசைன், அவரது தேர்வு குறித்து அவ்வப்போது வர்ணித்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த பாராட்டுகள் உங்கள் மனதில் இருந்து வர வேண்டுமே தவிர, உங்கள் வாயில் இருந்து வருவனவாக இருத்தல் கூடாது.

 

அவர்களின் செயல்களை பாராட்டுங்கள்:

கணவரின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஆதரவாக இருங்கள். அவர் தனக்காக மற்றும் குடும்பத்திற்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்களுக்கும் பாராட்டு தெரிவிக்க மறவாதீர்கள். புகழ் மற்றும் பாராட்டுக்கு மயங்காதவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை. சிறு சிறு பாராட்டுகளே, ஒருவரை சில அரிய செயல்களை செய்ய வைக்கும். எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

 

அடிக்கடி ஆச்சரியப்படுத்துங்கள்:

திருமணத்திற்கு பிறகு, தம்பதிகளிடையே ஏற்படும் சில சில சிறு ஊடல்கள் கூட அவர்களிடையே பிரிவை ஏற்படுத்தவே வாய்ப்புகள் அதிகம். இந்த நிலையில், நீங்கள் உங்கள் கணவருக்கு அடிக்கடி அதிர்ச்சி வைத்தியம் அளித்து சந்தோசப்படுத்த வேண்டும். வினோதமான நடவடிக்கைகளால், அடிக்கடி கணவரை ஆச்சரியப்படுத்த வேண்டும். அவரை மகிழ்விக்கும் வகையில் உடை அணிய வேண்டும். அவருக்கு பிடித்த வகையிலான கேக்குகளை தயார் செய்து அவரை ஆச்சர்யப்படுத்த வேண்டும். கணவரின் மனம் கோணாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

தொடரும்…

Leave a Comment

Write and Earn with Pazhagalaam