Visitors have accessed this post 612 times.

சினி தூறல்கள்

Visitors have accessed this post 612 times.

‘கே.ஜி.எப்-2’ படத்தின் டிரைலர் வெளியாகிறது

 

ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் ‘கே.ஜி.எப்-2’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘யாஷ்’ ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு 

ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ‘கே.ஜி.எப்-2’ திரைப்படத்தின் டிரைலர்  வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ‘கே.ஜி.எப்-2’ டிரைலர் மார்ச் 27ஆம் தேதி மாலை  6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

 

இதுவரை இல்லாத வித்தியாசமான கெட்டப்பில் சூர்யா.. ஆஸ்கருக்கு தயாராகும் அடுத்த படம்

 

வெகு காலத்திற்குப் பிறகு சூர்யாவும் இயக்குனர் பாலாவும் இணையும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். படம் ஒப்பந்தம் ஆகி விட்டது. படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று படக்குழு கூறி இருந்தது. அதன்படி இயக்குனர் பாலா ஷூட்டிங்கை மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் எப்போது எங்கே ஆரம்பிக்கிறார் என்ற எந்த தகவலும் வரவில்லை..

 

அதேபோல இந்த படத்தில் வாய் பேச முடியாதவராகவும், காது கேளாதவராகவும் நடிகர் சூர்யா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கசிந்து இருக்கிறது. சூர்யா இதற்கு முன்னர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் மிகவும் பேசப்பட்ட கதாபாத்திரமாக இருந்தது பேரழகன் சூர்யா தான். அதேபோல இந்த கதாபாத்திரத்திலும் பல வித்தியாசங்களை காட்டி, தனது முழுத்திறமையையும் காட்டி சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆகவே, நிச்சயமாக சூர்யாவிற்கு இந்த படம் ஒரு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இயக்குனர் பாலாவின் கூட்டணியை விரும்பும் அனைத்து நடிகர் நடிகைகளும் இயக்குனர் பாலா எல்லா விஷயத்திலும் ஓகே ஆனால் படம் எடுக்க ஆரம்பித்து வெகு காலம் படத்தின் படப்பிடிப்பை இழுத்துக் கொண்டே அவர் போவதால் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அவர்கள் கமிட்டாகும் மற்ற படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் இயக்குனர் பாலா விரைந்து படப்பிடிப்பை முடித்தால் இன்னும் பல நடிகர்கள் பாலாவோடு இணைந்து பணியாற்றுவார்கள் என்று சினிமா வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன.

 

அதேபோல இந்த படத்தில் வாய் பேச முடியாதவராகவும், காது கேளாதவராகவும் நடிகர் சூர்யா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கசிந்து இருக்கிறது. சூர்யா இதற்கு முன்னர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் மிகவும் பேசப்பட்ட கதாபாத்திரமாக இருந்தது பேரழகன் சூர்யா தான். அதேபோல இந்த கதாபாத்திரத்திலும் பல வித்தியாசங்களை காட்டி, தனது முழுத்திறமையையும் காட்டி சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆகவே, நிச்சயமாக சூர்யாவிற்கு இந்த படம் ஒரு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இயக்குனர் பாலாவின் கூட்டணியை விரும்பும் அனைத்து நடிகர் நடிகைகளும் இயக்குனர் பாலா எல்லா விஷயத்திலும் ஓகே ஆனால் படம் எடுக்க ஆரம்பித்து வெகு காலம் படத்தின் படப்பிடிப்பை இழுத்துக் கொண்டே அவர் போவதால் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அவர்கள் கமிட்டாகும் மற்ற படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் இயக்குனர் பாலா விரைந்து படப்பிடிப்பை முடித்தால் இன்னும் பல நடிகர்கள் பாலாவோடு இணைந்து பணியாற்றுவார்கள் என்று சினிமா வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன.

ரெட் கார்டு எல்லாம் ரெக்கார்டாக மாறப்போகிறது.. வடிவேலுவை தூக்கி நிறுத்திய உதயநிதி!

 

நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு நடிகர் வடிவேலு தற்போது தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளார். தமிழ் சினிமாவில் அவர் கொஞ்சம் ஓவராக நடந்து கொண்டால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டார்.

 

அதன்பிறகு அவருக்கு போட்டிருந்த அந்த தடை நீங்கிய பிறகு அவர் தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஒரு வெளிநாட்டு ஹீரோயினும் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இதையடுத்து வடிவேலு அடுத்தடுத்த படங்களில் தற்போது ரொம்ப பிஸியாக இருக்கிறார். மனுஷன் கையில் இப்போது கைவசம் 5 முதல் 6 வரை படங்கள் வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவருடைய லிஸ்ட் இன்னும் நீண்டு கொண்டே போகிறது.

 

தற்போது ரஜினி நடிக்கப் போகும் புது படத்தில் கூட  வடிவேலு கமிட் ஆக இருப்பதாக ஒரு செய்தி அடிபடுகிறது. அதுமட்டுமல்லாமல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியானது.

 

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் வடிவேலுவின் பெயர்தான் முதலாவதாக இடம் பிடித்துள்ளது. அவருடைய பெயருக்கு பிறகுதான் மாரி செல்வராஜ், உதயநிதி ஆகியோரின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது

 

சீனியாரிட்டி படி அவர் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து படக்குழு இவ்வாறு செய்துள்ளதாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரெட் கார்டு முடித்து திரும்ப வந்தவுடன் அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் காமெடியில் கலக்கி மிகப்பெரிய ரெக்கார்டாக மாறப்போகிறது என்று கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

 

அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய 2ஆம் பாகம்.. அப்போதே உஷாராய் கணித்த செல்வராகவன்

 

படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் கார்த்தி தற்போது கைவசம் ஏராளமான படங்களை வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் அடுத்ததாக விருமன் படம் வெளியாக இருக்கிறது.

 

இதற்குத்தான் செல்வராகவன் உஷாராக முன்பே இதன் இரண்டாம் பாகம் 2024 ஆம் ஆண்டுக்குள் வரும் என்று கூறிவிட்டார். இப்பொழுது செல்வராகவன் டைரக்ஷன் செய்வதோடு நடிப்பிலும் பயங்கர பிஸியாகிவிட்டார். இவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க பல இயக்குனர்களும் தற்போது போட்டி போட்டு வருகின்றனர்.

 

இதனால் திட்டமிட்டபடி செல்வராகவன் அந்த படத்தை எடுத்து முடிப்பாரா என்பது சந்தேகமாகவே இருந்து வருகிறது. ஏனென்றால் அந்த படத்தை எடுத்து முடிப்பதற்கு நிச்சயம் அதிக காலதாமதம் ஆகிவிடும். இந்நிலையில் அவர் நடிப்பில் வேறு ஆர்வமாக இருக்கிறார். இதனால் அவருடைய ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தை நினைத்து கவலையில் இருக்கின்றனர்.

 

அப்பாவை பெருமைப்படுத்தி வெளியான 6 படங்கள்.. இப்பவும் கமல், சிவாஜியை அடிச்சுக்க ஆளில்லை

 

தமிழ் சினிமாவில் காதல், ஆக்ஷன், த்ரில்லர் என பல பரிமாணங்களைக் கொண்ட படங்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் அப்பா பாசத்தை அடிப்படையாக கொண்டு பல படங்கள் வெளியாகியுள்ளது. தந்தைக்கு இணையாக யாரும் இல்லை என்ற அளவிற்கு தந்தையை பெருமைப்படுத்தி வெளியான 6 படங்களை பார்க்கலாம்.

தேவர் மகன் : பரதன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரேவதி, கௌதமி, நாசர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தேவர் மகன். இப்படத்தில் சிவாஜி கணேசன் பெரிய தேவராக நடித்திருந்தார். அவருடைய மகனாக சக்தி கதாபாத்திரத்தில் கமலஹாசன் நடித்து இருந்தார். இப்படத்தில் தந்தை, மகன் புரிதலை அழகாக வெளிக்காட்ட இருந்தது.

 

தவமாய் தவமிருந்து : சேரன் இயக்கத்தில் சேரன், பத்மப்ரியா, ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தவமாய் தவமிருந்து. இப்படம் மகனின் பிணைப்பு மற்றும் குடும்ப உறவுகளின் சிறப்பை வெளிக்காட்டி இருந்தது. இப்படத்தில் சேரன் பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்ட பின்பும் ராஜ்கிரண் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வார்.

 

தெறி : அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தெறி. இப்படத்தில் தன் குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்பதற்காக தன் அடையாளத்தை மாற்றிக் கொள்கிறார் விஜய்.

குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்து வளர்ப்பதை விட சமூக விழிப்புணர்வு, பொறுப்புணர்வுடன் வளர்க்க வேண்டும் என்ற கருத்தை வெளிக்காட்டிய படம் தெறி.

 

என்னை அறிந்தால் : கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், அருண்விஜய், அனிகா, திரிஷா, அனுஷ்கா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இப்படத்தில் தன் காதலியின் குழந்தைக்காக போலீஸ் வேலையை விட்டு செல்கிறார் அஜித். தந்தைப் பாசத்தை முழுமையாக வெளிக்காட்டிய படம் என்னை அறிந்தால்.

 

சிம்புவுக்கு அடுத்த ஹிட் பார்சல்.. விஜய சேதுபதியை தூக்கி சாப்பிட வரும் புது வில்லன்

 

மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியால் சிம்பு தற்போது பிஸியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு, பத்து தலை போன்ற திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.

 

சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு எஸ் ஜே சூர்யாவின் வில்லத்தனமான நடிப்பும் ஒரு வகையில் காரணம். இதனால் சிம்பு இந்த படத்தில் நடிப்பதற்கு தனக்கு நிகரான ஒரு மிகப் பெரிய வில்லன் தான் வேண்டும் என்று இயக்குனரிடம் கூறியிருக்கிறார்.

 

இதனால் இயக்குனர் இந்த கதையை பகத் பாசிலிடம் கூறியிருக்கிறார். தற்போது வில்லன் வேடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் அவருக்கு இயக்குனர் கூறிய இந்த கதை ரொம்பவும் பிடித்து விட்டதாம். இதனால் கூடிய விரைவில் சிம்பு, பகத் பாசில் கூட்டணியில் இப்படம் வெளியாக இருக்கிறது.

 

சமீபகாலமாக பகத் பாசில் மலையாளத் திரைப்படங்களை விட தமிழ் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அதிலும் வில்லன் கதாபாத்திரம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்திருக்கிறது. இதனால் விஜய் சேதுபதி, எஸ் ஜே சூர்யாவிற்கு பின் அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் வில்லனாக நடிக்க பகத் பாசிலுக்கு பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

 

போகிற போக்கை பார்த்தால் பகத் பாசில் கேரளாவை மறந்துவிட்டு தமிழ்நாட்டில் செட்டில் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால் தற்போது இருக்கும் பல முன்னணி நடிகர்களும் இவரைத்தான் வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam