Visitors have accessed this post 760 times.
சிலர் தர்மம் செய்வதற்கு தனது சொத்தில் ஒரு பங்கை எழுதி வைப்பார்கள்.
அதை பார்க்கும் பல நம்மால் இது மாதிரி செய்ய முடியவில்லை என ஏக்கம் கொள்வர். இது தவறான விஷயமாகும்.
யாருக்கு என்ன முடியுமோ அதை செய்தாலே போதும். மனம் தான் முக்கியமே தவிர பொருளல்ல. எல்லோரும் தர்மம் செய்து தான் ஆக வேண்டுமா என ஒருவர் கேட்டார் நிச்சயம் மனிதராக பிறந்த அனைவரும் தருமம் செய்தே தீரவேண்டும்.
இயலாதவர்கள் ஏதோ ஒருவகையில் பிறருக்குத் தொண்டு செய்யலாம். மற்றவர்கள் தர்மம் செய்யும்படி தூண்டுவது நற்செயலே என விளக்கமளித்தார்கள்.
இப்படி செலவில்லாத தருமத்தை அனைவரும் செய்யலாமே!
அருமையான பதிவு