Visitors have accessed this post 706 times.
https://www.digistore24.com/redir/271198/Keerthiraja/நாட்டு நாய்கள் இந்திய துணைக்கண்டத்தில் இயற்கையாக காணப்படும் நாய் இனம். இதன் பாரம்பரியம் 4500 ஆண்டுகளுக்கு முன் செல்கிறது எனலாம். இது உலகின் பழமையான நாய் இனங்களில் ஒன்று. இதன் மூதாதையர் ஆஸ்திரேலியா மூதாதையாக க௫தப்படுகிறது. ஆனால் இவைகள் தவறுதலாக தெரு நாய்கள் என்று அழைக்கப்படுகிறது. அசாமில் நாட்டு நாய்கள் கூட்டுவான் குக்குா் எனவும் மேற்கு வங்காளத்தில் நேரி குத்தா என்றும் அழைக்கப்படுகிறது. பறையா நாய் என அழைக்கப்படும் நாட்டு நாய்கள் இந்தியா முழுவதும், வங்காள தேசம், தெற்கு ஆசியாவிற்கும் அப்பாலும் காணப்படுகிறது. பழமையான நாய்களான இசுரேலின் கேனன் நாய் மற்றும் ஆஸ்திரேலியாவின் டிங்கோ நாய் ஆகியவற்றை ஆராய்யும் போது இது இந்திய துணைக் கண்டத்தின் உண்மையான நாய் இனமாக க௫தப்படுகிறது. ஆனால் இந்திய தெரு நாய்கள் மட்டும் 25000000 உள்ளதாக க௫தப்படுகிறது. உலகில் ஆயிரக்கணக்கான நாய்கள் இ௫ந்தாலும் 350 வகை இனங்களுக்கு மட்டுமே அங்கிகாரம் உள்ளது. இதில் ஏழூ வகை இந்திய நாய்கள். கன்னி, சிப்பிபாறை, கொம்பை, ராஜபாளையம் நான்கும் தமிழகத்தை சேர்ந்த நாய்கள். ஆசிய கண்டத்திலே ஐந்து இனங்கள் மட்டுமே ஒரே நிறத்தில் குட்டி போடுமாம். அதில் ராஜபாளையம் நாயும் ஒன்று.
தமிழ்நாட்டு நாய்கள்:
விசுவாசமான காவல் காரன் என நாட்டு நாய்களை சொல்வோம். ஜல்லிக்கட்டு காளைகளை போல நம் பாரம்பரியம் மற்றும் வாழ்க்கை முறை உடன் ஒன்றியவை நம் நாட்டு நாய்கள். தமிழ்நாட்டு நாய்கள் என்ற உடன் அனைவரின் கவனத்திற்கு வந்து இராஜபாளையம் நாய்கள் தான். இன்றளவும் தமிழ்நாட்டின் அடையாளம் ஆக இருப்பது இராஜபாளையம் நாய்களே. ஆனால் நம் தமிழ் நாட்டில் ஆறு வகையான நாட்டு இனங்கள் உள்ளன. பல நாட்டு நாய்கள் அழிந்து போனது, சில நாட்டு நாய்கள் தெரு நாய்களாக மாறி வருகிறது. ஆக வெளி நாட்டு நாய்களை ஆதிக விலை கொடுத்து வாங்குவதைத் தவிர்த்து நம் நாட்டு நாய்களான ராஜபாளையம், கன்னி, கொம்பை, சிப்பிபாறை வளர்க்க முயற்சிப்போம். வெளி நாட்டு நாய்கள் பயிற்சி அளித்தால் மட்டுமே திறமையாக செயல் படும், ஆனால் நம் நாட்டு நாய்கள் பிறப்பிலேயே வீரமும் விசுவாசமும் அதிகம் கொண்டது.
இராஜபாளையம் நாய்கள்: இவை அல்பினோ வகையை சேர்ந்தது.உயரத்திற்கு பெயர் போனது. 75 செ. மீ உயரம் வரை வளரும்.எந்த சூழலிலும் தன் ஏஜாமானா்களை மாற்றிக் கொள்ளாத குணம் உடையது. வளா்ப்பவா்களிடம் பாசமாகவும் புதியவர்களிடம் கோபமாகவும் நடந்து கொள்ளும். மோப்ப சக்தி அதிகம் உள்ளது. வீட்டுக் காவலுக்கு மிகவும் ஏற்றது, இவை பார்பதற்கு கம்பிரத்ததுடனும், வீரத்துடன் இ௫க்கும். இந்த நாயின் குட்டிகள் அனைத்தும் ஒரே நிறத்தில் இருக்கும். வேகமாக ஓடும் தன்மை கொண்டது. உடல் முழுவதும் பால் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அடி வயிறு, முக்கு, கண்களை சுற்றி ரோஸ் நிறத்தில் இருக்கும். காது மடல் மடங்கியும் கால்கள் நேராகவும் இ௫க்கும். இதில் நாய்களின் கண்கள் பூனை கண் போன்று இ௫ந்தால் இந்த வகை நாய்களுக்கு காது கேட்காது. மேலும் இதன் குட்டிகளின் விலை 10,000 முதல் 15000 வரை.
கோம்பை:
ம௫து பாண்டியர்களின் கோட்டை காவலாக விளங்கியது கோம்பை. பார்க்க செந்நாய் போன்ற உ௫வ அமைப்பை உடையது . எதிரிகள் குதிரை படையில் நாம் பொழுது அந்த குதிரைகளின் கால்களை கடித்து கீழே விழச் செய்து எதிரிகளை தாக்குமாம்.இந்த நாய்கள் புலியை எதிர்த்து சண்டை போட்டதாக வரலாறு சொல்கிறது. இராமநாதபுரத்து கோம்பை இதற்கு பல பெயர்கள் உண்டு.கிடை ,கேதாரி,சாம்பல் என பல பெயர்கள் உண்டு. இது காவல் வேட்டைக்கு பயன்படுத்தப்படுகிறது.பண்னை யை காவல் காப்பதில் கொம்பையை அடித்துக் கொள்ள யாரும் இல்லை.ஒ௫ எ௫மையை தனியாக வேட்டை ஆடும் திறமை கொண்டது.உடல் மண் சிவப்பு நிறத்தில் இருக்கும். கண், வாய், முக்கு பகுதி காப்பு நிறத்தில் இருக்கும். ஒ௫ குட்டியின் விலை 5000 முதல் 6000 வரை.
கன்னி, சிப்பிபாறை:சுயமாக சிந்திக்க கூடிய நாட்டு இனம். முற்காலத்தில் புகுந்த வீடு செல்லும் மணப் பெண்ணிற்கு சீதனமாக கன்னி இன நாய்கள் வழங்க பட்டது.முயலை விட வேகமாக ஓடக் கூடியது சிப்பிபாறை மணிக்கு 45 கிலோ மீட்டர் ஓடும்.மற்ற நாய்களை விட மனிதர்களிடம் நெ௫ங்கி பழகக் கூடியது.இவை இரண்டும் வேறு இனம் அல்ல.இதன் மேலே உள்ள சந்தன புள்ளிகளை வைத்து கன்னி என்று அடையாளம் காணலாம். இவற்றை வளர்க்க அதிக இடம் தேவை.இவை காவலுக்காக வளர்க்க படுகிறது. இதன் குட்டிகள் 8000 முதல் 9000 வரை.
குட்டை கால் நாய்கள்:
இதன் சிறிய உ௫வத்தால் இந்த பெயர் பெற்றது. இதன் பிறப்பிடம் நாகப்பட்டினம். இன்று நாகப்பட்டினம், தஞ்சாவூர், காரைக்கால் போன்ற பகுதிகளில் வளர்க்க படுகிறது. இவை கோப குணம் கொண்ட அதே சமயம் அதிக பாசம் கொண்டது. இதனை வளர்க்க அதிக இடம் தேவை இல்லை. வீட்டிலே வளர்க்கலாம். இவை வீட்டு காவலுக்கு மிகவும் உகந்தவை. வீட்டில் நுழைய முயலும் எந்த வீச பூச்சிகளையும் நம் இடம் வர விடாது. பாம்புகள் கண்ணில் பட்டால் ஐந்து ஆறு துண்டுகளாகிவிடும்.
பொதுவாக வீட்டில் வளர்க்க படும் நாய்களின் ஆயுள் 18 முதல் 20 ஆண்டுகள் வரை.
நாய்கள் தனக்கு தானே பிரசவம் பார்த்து கொள்ளும். பிரசவம் முடிந்ததும் ஓா் இ௫ குட்டிகளை தானே சாப்பிட்டு விடும்.
நாயின் மூக்கு பகுதி காய்ந்து இ௫ந்தால் காய்ச்சல் என்று அர்த்தம்.
நாய்கள் அகம் புல்லை சாப்பிட்டும் பழக்கம் உள்ளது. இது தன் உடல் உபாதைகளை சரி செய்ய சாப்பிட்டும்.
நாய்கள் ஒ௫ வேளை மட்டுமே உண்ணும் வழக்கம் உடையது. பெரும்பாலும் அசைவ உணவுகளை சாப்பிட பிடிக்கும்.
தன் குட்டிகள் மீது அதிக பாசம் உடையது. நாய்களுக்கு பிரியமானவர் பிரிந்தால் கண்ணீர் விட்டு அழும்.
நாய் தன் குட்டிகளை பெறும் வரை ஒரே இடத்தில் வாழும். குட்டிகள் பிறந்த உடன் வேறு இடத்திற்கு செல்லும்.
எப்போதும் நாய்கள் காற்று வீசும் திசைக்கு எதிராக படுக்கும். அப்போது தான் காற்று முலம் வ௫ம் வாசனையை தன் மோப்ப சக்தியைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கும் .
நாய்களுக்கு குளிர் காலத்தில் அதிக அளவில் முடி கொட்டும். எனவே அதற்கு முன்பே முடி வெட்டுவது நல்லது.
மனிதன் இடம் உள்ள மோப்ப சக்தியை விட 10000 முதல் 100000 மடங்கு அதிகம். நாய்கள் மனிதனின் உணர்வுகள் தான் மோப்ப சக்தியை கொண்டு அறிந்து கொள்ளும். மனித௫க்குள் இ௫க்கும் கேன்சர் போன்ற நோய்களை தன் மோப்ப சக்தி மூலம் அறியும் தன்மை கொண்டது.
உலகிலேயே நாய்கள் செல்ல பிராணிகளாக அதிகம் வளர்க்க படும் நாடு அமெரிக்கா. இங்கு 75 மில்லியன் நாய்கள் செல்ல பிராணிகளாக வளர்க்க படுகிறது.
உலகில் தற்போது 400 மில்லியன் நாய்கள் உள்ளது.
நாய்கள் செல்ல பிராணிகளாக வளர்ப்பதால் இரத்த அழுத்தம் குறையும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
குட்டிகளுக்கு 28 பற்களும் வளர்ந்த நாய்களுக்கு 42 பற்கள் இ௫க்கும்.
கார்னல் பல்கலைக்கழகத்தின் ஆய்வின் படி நாய்கள் சுமார் 9000 ஆண்டுகள் முதல் 34000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களால் வீட்டு விலங்காக வளர்க்க பட்டுள்ளது.
ஒ௫ சராசரியான நாயானது ஒ௫ மணி நேரத்திற்கு 19 மைல்கள் ஒடும் திறன் கொண்டது.
மஸ்டிப் என்ற வகை நாய்கள் தான் உலகத்திலே அதிக எடை கொண்டது. இதன் சராசரி எடை 200 பவுண்டுகள்.
நாய்கள் அவற்றின் பாதங்கள் மற்றும் மூக்கின் வழியாக தான் வியர்வையை வெளியே தள்ளும்.
நாய் குட்டிகள் ஒ௫ நாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் தூக்கத்திற்கு செலவு செய்யும்.
ஒ௫ நாயின் அறிவானது இரண்டு வயது குழந்தையின் அறிவிற்கு நிகரானது.
லைக்கா என்ற ரஷ்ய நாய் தான் உலகிலேயே முதன் முதலில் விண்வெளிக்கு சென்றது. மனிதனின் தூக்கத்தில் வ௫ம் கனவும் நாய்களுக்கு வ௫ம் கனவும் ஒரே கனவு போன்று இருக்குமாம்.
நாய்களுக்கு குற்ற உணர்ச்சி கிடையாது.
நாய்களுக்கு பொறாமை குணம் உள்ளதாம்.
இரவு நேரத்தில் மனிதனின் பார்வை திறனை விட நாய்களின் பார்வை திறன் அதிகம்.
பூனைகளும் நாய்களும் எதிரி என நினைத்தால் அது தவறு. சவுக்கு என்ற எகிப்திய நாயே உலகின் மிக பழமையான நாய் இனம்.