மாற்று சிந்தனை இல்லாமல்
ஒரு கழுதை மரத்தில் கட்டப்பட்டிருந்தது. ஒரு பேய் இரவில் கயிற்றை அறுத்து கழுதையைவிடுவித்தது. கழுதை சென்று பக்கத்து விவசாயியின் நிலத்தில் பயிர்களை நாசம் செய்தது. இதனால்ஆத்திரமடைந்த விவசாயியின் மனைவி கழுதையை சுட்டுக் கொன்றார். கழுதையின் உரிமையாளர் நஷ்டம் அடைந்தார். பதிலுக்கு அவர் விவசாயியின் மனைவியைக்கொன்றார். மனைவி இறந்ததால் கோபமடைந்த விவசாயி அரிவாளை எடுத்து கழுதையின் உரிமையாளரைக்கொன்றார். கழுதையின் உரிமையாளரின் மனைவி கோபமடைந்து அவளும் அவளுடைய மகன்களும்விவசாயியின் வீட்டிற்கு தீ வைத்தனர். விவசாயி, தனது வீட்டை சாம்பலாக்கியதைப் பார்த்து, கழுதையின் உரிமையாளரின் மனைவிமற்றும் குழந்தைகளைக் கொன்றார். இறுதியாக, விவசாயி வருந்தியபோது, அவர் பேயைக் கேட்டார்,” ஏன் நீ அனைவரையும்கொன்றாய்? பேய் பதிலளித்தது, “நான் யாரையும் கொல்லவில்லை, நான் ஒரு கயிற்றில் கட்டப்பட்டகழுதையை விடுவித்தேன். உங்களுக்குள் இருந்த பிசாசுகளை விடுவித்தவர்கள் நீங்கள்அனைவரும் தான், அதன் பிறகு நடந்த அனைத்து மோசமான விளைவுகளும் அதுதான் விளைவித்தது.” அந்த பேய் மாதிரிதான் இன்றைய ஊடகங்களும். இது தினமும் கழுதைகளைவிடுவித்துக்கொண்டே இருக்கிறது, மக்கள் மாற்று சிந்தனை இல்லாமல். ஒருவரையொருவர்எதிர்வினையாற்றுகிறார்கள் & வாதிடுகிறார்கள், ஒருவரையொருவர் காயப்படுத்துகிறார்கள்.