Visitors have accessed this post 752 times.

எஸ்.வீ. சேகர்-இன் உருட்டுகளில் ஒன்று

Visitors have accessed this post 752 times.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆவியுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதாக பிரபல நடிகரும், அரசியல் பிரமுகருமான எஸ்.வி.சேகர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

மனித ஆன்மாவுக்கு அழிவே இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்த கற்பிதங்களை வெகுஜனங்கள் நம்பியும் வருகின்றனர். ஆனாலும் சொர்க்கம், நரகம், ஆவி, ஆன்மா இவையெல்லாம் இன்றளவும் மனிதனின் ஆறாம் அறிவுக்கு எட்டாத விஷயங்களாகவே உள்ளன.

அதேசமயம் தங்களுக்கு ஆவி, ஆன்மாகளுடன் பேசு திறன் உள்ளது. அறிவியல்ரீதியான இந்த வித்தை தங்களுக்கு தெரியும் எனக்கூறி அவ்வபோது சிலர் நம்மை மிரட்சி அடைய செய்து விடுகின்றனர்.

இத்தகைய மிரட்சி மனிதர்களின் வரிசையில் பிரபல நடிகரும், அரசியல் பிரமுகருமான எஸ்.வி.சேகர் சமீபத்தில் இணைந்துள்ளார். ‘தான் ஜெயலலிதாவின் ஆவியுடன் பேசி வருவதாக புதிதாக உருட்டியுள்ளார்.

 

 

அதிசயத்தக்க இந்த அனுபவம் குறித்து அவர் மேலும் கூறும்போது, “ஜெயலலிதாவின் பாராட்டுக்களை பெற்றிருந்த நான், அதிமுகவில் இணைந்து பணியாற்றியபோது, ஜெயலலிதாவிடம் பணம் வாங்கி செலவு செய்யாத ஒரே ஆளாக திகழ்ந்தேன்.

இறந்தவர்களின் ஆவியை தொடர்பு கொண்டு அதனுடன் பேசுவது ஓர் அறிவியல் முறை. இந்த முறையில்தான் ஜெயலலிதாவின் ஆவியுடன் பேசி வருகிறேன். இதேபோல் எனது தந்தையின் ஆவியுடனும் அவ்வபோது பேசி கொண்டிருக்கிறே்ன்.

 

ஆன்மாவுடன் பேச வேண்டுமென நாம் மட்டும் நினைத்தால் போதாது. அவர்களும் நினைக்க வேண்டும்என்று யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் எஸ்.வி.சேகர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

 

எஸ்.வி. சேகர் சினிமாவுக்கு வருவதற்கு முன் அவர் நாகைச்சுவை நாடகங்களில் நடித்தார் பின்னர் ஆடியோ மட்டும் கேட்கும் வகையிலும் ரேடியோவிலும் நாடக கதைகளில் பங்கேற்பாளர் அவர்களின் நாடகங்கள் கேட்பதற்கு நகைச்சுவையாக இருக்கும்.

 

இவர் நகைச்சுவை நாடகங்களில் நடிப்பது மாட்டுமல்லாமல் சினிமா துறையிலும் நடித்து வந்தவர் பெருமாளும் இவர் இயக்குனர் விசு அவர்களில் பாடங்களில் சில முக்கிய கதாபத்திரங்களில் யெற்று நடித்திருப்பார்.

 

இவர் நடித்த படங்களில் கமலஹாசனுடன் நடித்த வருமையின் நிறம் சிவப்பு எனும் படம் இவர் நடித்த படங்களில் குறிப்பிட தாக்கது

Leave a Comment

Write and Earn with Pazhagalaam