Visitors have accessed this post 751 times.
யார் இவர் ?
இந்திய நீர் பி பாசனத்தின் தந்தை என அறியப்படும் சார் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார்
இவர் தான் பயனற்று இருந்த கல்லணையை ச் சிறு சிறு பகுதிகளாய்ப் பிரித்து மணல் பொக்கிகளை அமைத்தார் அப்போது , கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறினார். கல்லணைக்கு கிராண்ட் அணைக்கட் என்ற பெயரையும் சூட்டினார்.
மேலும் கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டுதான் 1873ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.