Visitors have accessed this post 725 times.
நம்மை பல பயங்கள் பின்தொடரும். இரவில் தனியாக தூங்க, அவரைப்பார்த்தால், இவரைபார்த்தால் பயம் என்று பல விதங்களில் நம்மைத் துன்புறுத்தும். உண்மையாகவே இது பயங்கரமானவை அல்ல. நம் உயிரை எடுப்பதையும் அல்ல. அவற்றிலிருந்து தப்பித்துக் கொண்டு வாழ்வோமே தவிர, அவற்றிலிருந்து விடுபட எந்தவித முயற்சியும் செய்வது இல்லை. ஏனென்றால் முயற்சிப்பதற்கு பயம்.
இப்படியே வாழ்ந்தால் நம்மால் எதுவும் செய்ய முடியாது. உண்மையில் பிரச்சினையை எதிர்க்கும் சக்தி இருக்கும். ஆனால் பிரச்சினைகள் வருமோ என்ற எண்ணம் தான் நம்மை வாட்டும். எனவே என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று பணிகளை சரியாக செய்யுங்கள். பயமில்லாத வாழும் உங்களுக்கு சொந்தமாகும்.