Visitors have accessed this post 757 times.
இயற்கைப் பொருட்களைக் கொண்டு முடி வளர்வதற்காக எண்ணெய் தயாரித்தல்
இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நாம் சிறந்த முறையில் வீட்டிலேயே தலைக்கு தேய்க்கும் எண்ணெய் தயாரித்துக் கொள்ளலாம் இதன் மூலம் முடி கொட்டுவது நின்று விடும் முடி அடர்த்தியாக வளரும் முடி கருமை நிறமாக இருக்கும் பொடுகு தொல்லை இருக்காது இது உடலுக்கும் தலைமுடிக்கும் ஆரோக்கியமான ஒரு சிறந்த மூலிகை எண்ணெய் ஆகும்.
எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:
1) செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணெய் – 1/2
2) நெல்லிக்கை – 4
3) கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
4) வெந்தயம் – 2 டீஸ்பூன்
5) மருதாணி இலை- சிறிதளவு
6) செம்பருத்தி இலை- ஒரு கைப்பிடி , செம்பருத்தி பூ
7) கற்றாழை – சிறிதளவு
8) ரோஜா இதழ் – தேவையான அளவு.
செய்முறை விளக்கம்:
அடுப்பில் காய்ந்து ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் பின்பு அதில் ஒவ்வொரு பொருட்களாக மெதுவாக சேர்த்து நன்றாக வதக்கி பிறகு அவற்றை மெதுவாக நல்ல ஒரு துணியை எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும் பின்பு அதை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும் தேவையான பொழுது அதை எடுத்து நாம் உபயோகித்துக் கொள்ளலாம் மற்றும் வாரம் இரு முறை தலையில் எண்ணெய்தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது
எண்ணெய் வடிகட்டிய பிறகு இருக்கும் சக்கையை நாம் குளிக்கும் முன்பு தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு தலைக்கு குளித்து கொள்ளலாம்