Visitors have accessed this post 764 times.
எலியின் பசி
ஒரு ஊரில் ஒரு எலி இருந்துச்சாம்… அது ரொம்பநாள் பட்டினியா இருந்துச்சு. ஒரு நாள் எலிக்கு ரொம்ப பசியாம். அச்சமயம் ஒரு கூட்டை பாத்துச்சாம். அந்த கூட்டுக்குள்ள உள்ளே நுழைய சின்ன ஓட்டை தான் இருந்துச்சு… கஷ்டப்பட்டு உள்ளே நுழைஞ்சுதாம். அங்கு சோளம் இருந்துச்சாம். ஆசையா வயிறுமுட்ட சாப்பிட்டுச்சாம். சாப்பிட்டு எலி குண்டாயிடுச்சு. எலி வெளியே வர பார்த்துச்சு…….அந்த சின்ன ஓட்டையில வெளிய வரமுடியாம உள்ளயே மாட்டிகிச்சு பாவம்.
நீதி :
பேராசை இருத்தல் கூடாது.