Visitors have accessed this post 570 times.
சிக்கன் பிரியாணி என்பது நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவுகளில் ஒன்று அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் இந்த பிரியாணி செய்யும் முறை தான்.
சிக்கன் பிரியாணி செய்யும் தேவையான பொருட்கள்.
- பாசுமதி அரிசி-2டம்லர்
- சிக்கன்-1கிலோ
- வெங்காயம்-2
- தக்காளி-2
- பச்சை மிளகாய்-2
- கொத்தமல்லி-சிறிதலவு
- புதினா-சிறிதஷவு
- இஞ்சி பூண்டு விழுது-2டீஸ்பூன்
- பட்டை-2
- லவங்கம்-5
- ஏலக்காய்-2
- பிரியாணி இலை-5
- சீரகம்-1டீஸ
- தயிர்-2டீஸ்பூன்
முதலில் பிரியாணி அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி 1/2 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காய் போட்டு கூடவே சீரகம் போட்டு பொரியும் வரை கிளறவும்.பிறகு நறுக்கிய வெங்காயத்தினை பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.பிறகு அதில் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் பிறகு அதனுடன் மல்லியிலை, புதினா இலை மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.பிறகு அதில் சிக்கன் போட்டு 5 நிமிடங்கள் வரை நன்றாக வதக்கவும். வதங்கியதும் 1டம்லர் தண்ணீர் ஊற்றி 2விசில் வரை விடவும்.பிறகு ஊறவைத்து அரிசியை குக்கரில் பரவலாக போடவும் மேலும் 2டம்லர் தண்ணீர் ஊற்றி குக்கரக மூடவும்.குக்கரில் விசில் வரும் முன்னரே ஸ்டவை ஆஃப் செய்ய வேண்டும்.அப்போது தான் பிரியாணி குலையாமல் வரும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்தாள் சுவையான சிக்கன் பிரியாணி தயார்.