Visitors have accessed this post 726 times.

தென்காசி வட்டார பண்பாடும் மக்களும்

Visitors have accessed this post 726 times.

தென்காசி வட்டார பண்பாடும் மக்களும்

முன்னுரை

பாரதநாடு பழம்பெரும் நாடு பாருக்குள்ளே நல்ல நாடு என இந்திய நாட்டினை அறிஞர் புகழ்வார் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலி மாவட்டத்தில் பலதரப்பட்ட மத இன மக்கள் வாழ்கின்றனர் இவர்களில் வழிபாட்டு முறைகளும் சடங்கு முறைகளும் சமய நெறிகளும் வேறுபட்டு இருப்பினும் உணர்வுகளால் ஒற்றுமையுடன் விளங்குகின்றனர் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள தென்காசி வட்டாரத்தில் வாழும் மக்களின் வாழ்வியல் தொடர்பான செய்திகள் இவ்வியலில் இடம்பெறுகிறது

பண்பாடு

பண்பாடு என்பது மனிதனை பற்றியது மனிதன் சமுதாயத்தில் பற்றிய பண்பாடு என்பது குணச் சிறப்புஎன பொருள்படும் தனிமனிதனின் குன சிறப்பை புலப்படுத்துவது பண்பாடு எனப்படும் பண்பாடு புத்துணர்ச்சியும் அழகு உணர்ச்சியும் ஊட்டுவதாகவும் ஆக்கவும் அளிக்கவும் வள்ளலான ஆற்றல் உடையது மனித சமூகத்தில் இருக்கிறது

பண்பாடு வளர்ச்சி

பல்வேறு வகையான பழக்கவழக்கங்களால் உருப்பெறும் பண்பாடு தன்னைத்தானே ஆதாரமாகக் கொண்டு நிலைத்து நிற்கக் கூடியது பண்பாடு மக்களால் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகிறது ஒருமைப்பாட்டு வளர்ச்சியால் மட்டுமே பண்பாடு ஒழுக்கம் சிதைந்து போகாமல் கட்டி காக்கப்படுகிறது என்ற உண்மையை பண்பாட்டின் பிறப்பிடமான நம் நாடு அறிந்து ஆக்கப் பணியில் ஈடுபட்டு வருகிறது அரசின் அரசியல் திட்டங்களும் மக்களின் கூட்டு உழைப்பும் ஒரே சீராக இருப்பின் சமூக அமைப்பில் பண்பாடு சிறக்கும்

 

 

இருப்பிடம்

தென்காசி வட்டாரம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 55 கிலோ மீட்டரில் மேற்கிலும் கேரளா எல்லையில் இருந்து 20 கிலோமீட்டர் கிழக்கிலும் அம்பாசமுத்திரத்தில் இருந்து 35 கிலோமீட்டர் வடக்கிலும் சிவகிரியில் இருந்து 40 கிலோ மீட்டர் தெற்கிலும் தென்காசி அமைந்துள்ளது

தென்காசி பெயர் காரணம்

தென்காசி ஊரின் பெயருக்கு காரணம் குறித்து இருவேறு கதைகள் புறப்படுகின்றனர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் விந்தன் கோட்டையை தலைநகரமாகக் கொண்ட தமிழ் நாட்டின் தென் பகுதியை ஆட்சி செய்து வந்தான் விந்தன் கோட்டையிலிருந்து பராக்கிரம பாண்டியன் ககன குளிகை இணை வாய்க்குள் அடக்கி கொண்டு வான்வழியாக இளங்காளை நாலு மணிக்கு பரந்து காசி நகருக்கு சென்று காசி விசுவநாதரை நாள்தோறும் வழிபட்டு சூரியன் உதிக்கும் முன்னால் மீண்டும் தன் இருப்பிடத்திற்கு வந்து விடுவான் ஒரு நாள் அரசி தானும் வருவதாக கூறி அவளை தன்னோடு அழைத்துக் கொண்டு வடக்கே உள்ள காசிக்கு பறந்து சென்று விசுவநாதரை வழிபட்டு திரும்பினான் வரும்போது ஒரு சிவலிங்கத்தையும் எடுத்து வந்தான் அரசனும் அரசியும் திரும்பியபோது அரசி விளக்கம் ஆனால் எனவே ஒரு சோலையில் இறங்கினர் சோலையில் சிவலிங்கத்தை வைத்து விட்டு அரசியார் மூன்று நாட்கள் குறித்தும் மீண்டும் ஊருக்கு புறப்பட ஆயத்தமானார்கள் தாங்கள் கொண்டு வந்த சிவலிங்கத்தை வைத்த இடத்தில் இருந்து எடுக்க முயன்றனர் சிவலிங்கத்தை எடுக்க இயலவில்லை இருவரும் வருத்தமுற்ற னர் இறைவன் காட்சி கொடுத்த சோலையிலே அந்த சிவலிங்கம் இருக்கட்டும் என்று ஆணையிட இருவரும் அந்த சிவலிங்கத்தை அங்கேயே வைத்துவிட்டு அந்த இடத்திற்கு சிவகாசி என பெயரிட்டு கோட்டைக்கு திரும்பினர் கோட்டைக்கு வந்த மன்னன் தாம் வசிக்கும் இடத்திலும் ஒரு சிவலிங்கம் அமைத்து அதற்கு காசி விஸ்வநாதர் என்ற பெயரையே சூட்டி வழிபட வேண்டும் என்றும் கோவிலிலும் எழுப்ப வேண்டும் என்றும் விரும்பினால் மன்னன் கனவில் பெருமாள் தோன்றி கோட்டையிலிருந்து கட்டெறும்பு வரிசை வரிசையாக ஊர்ந்து செல்லும் அந்த எறும்பு வரிசை எங்கு முடிகிறதோ அங்கு ஒரு சிவலிங்கம் இருக்கும் அந்த இடத்தில் கோயில் கோயில் கட்டு என்று பெருமாள் ஆணையிட்டார் மன்னன் கண்விழித்து கட்டெறும்பு காட்டிய வரிசையை பின்தொடர்ந்தான் கட்டெறும்பு கூட்டம் சிற்றாற்றின் கரையில் உள்ள செண்பக தோட்டத்தில் முடிந்தது அங்கு மன்னன் சிவலிங்கத்தின் தெய்வீக காட்சியைக் கண்டான் அவ்விடத்தில் கோயில் கட்டி அதற்கு தென்காசி என்றும் பெயரினை சூட்டினார்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam