Visitors have accessed this post 840 times.
40 வகை கீரைகளும் அதன் பயன்களும் …
காசினிக்கீரை … சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும் ,உடல் வெப்பத்தை தணிக்கும் .
சிறு பசளைக் கீரை … சரும நோய்களை நீக்கும் ,பால்வினை நோயை குறைக்கும்.
பசலைக்கீரை … தசைகளை பலம் அடைய செய்யும் .
கொடி பசலைக்கீரை … வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை போக்கும் .
மஞ்சள் கரிசலை கீரை … கல்லிரலை பலமாக்கும் ,காமாலையை குணப்படுத்தும் .
குப்பைக்கீரை … பசியை தூண்டும் ,வீக்கம் வத்தவைக்கும் ,உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் .
அரைக்கீரை … ஆண்மை பெருக்கும் .
புளியங்க்கீரை … சோகையை விலக்கும் ,கண் நோய் சரியாகும் .
பிண்ணாக்கு கீரை … வேட்டையை ,நீர்க்கடுப்பை நீக்கும் .
பரட்டைக் கீரை … பித்தம் ,கபம் ,நோய்களை விலக்கும் .
பொன்னாங்கன்னி கீரை … மேனி அழகையும் ,கண் பார்வையையும் அதிகரிக்கும் .
சுக்கா கீரை … ரத்த அழுத்தத்தை சீர் செய்யும் ,சிரங்கு மூலத்தை போக்கும்
வெள்ளை கரிசலைக் கீரை … ரத்த சோகையை நீக்கும் .
முருங்கை கீரை … நீரிழிவு நோயை நீக்கும் ,கண்கள் ,உடல் பலம் பெரும் .
வல்லாரை கீரை … மூளைக்கு பலம் தரும் ,நியாபக சக்தியை அதிகரிக்கும் .
முடக்கத்தான் கீரை … கை ,கால் முடக்கம் நீக்கும் ,வாயு தொல்லை விலகும் .
புண்ணை கீரை… சிரங்கும் ,சீதளமும் விலக்கும் .
புதினா கீரை … ரத்த சுத்தி செய்யும் ,அஜீரணம் அகற்றும் .
நஞ்சு முண்டான் கீரை … விஷத்தை முறிக்கும் .
தும்பை கீரை … அசதி ,சோம்பல் நீக்கும் .
கல்யாண முருங்கை கீரை … சளி ,இருமலை காணாமல் போக செய்யும் .
முள்ளங்கி கீரை … நீரடைப்பை நீக்கும் .
பருப்பு கீரை… உடல் சூட்டை தணிக்கும் , பித்தம் விலகும் .
புளிச்ச கீரை … கல்லிரலை பலமாக்கும் ,மாலைக்கண் நோய் குணமாகும் ,ஆண்மை பலம் தரும் .
மணலிக் கீரை … வாதத்தை நீக்கும் ,கபத்தை கரைக்கும் .
மணத்தக்காளி கீரை … வாய்ப்புண் ,வயிற்றுப்புண் குணமாக்கும் ,தேமல் அகலும் .
முளைக் கீரை … பசியை தூண்டும் ,நரம்பு மண்டலம் பலமடையும் .
சக்கரவர்த்தி கீரை … தாது விருத்தியாகும் .
வெந்தயக்கீரை … மலச்சிக்கலை நீக்கும் ,மண்ணீரல் ,கல்லிரல் பலமாக்கும் ,வாத ,காச நோய்களை விலக்கும் .
தூதுவளை … ஆண்மை தரும் ,சரும நோய் விலகும் ,சளி நீங்கும் .
தவசிக்கீரை… இருமலை போக்கும் .
சானாக்கீரை … காயம் ஆற்றும் .
வெள்ளைக்கீரை …தாய்ப்பாலை அதிகரிக்கும் .
விழுத்திக்கிறை … பசியை தூண்டும் .
கொடி காசினி … பித்தம் தணிக்கும் .
துயிலிக்கீரை … வெள்ளை வெட்டை நீக்கும் .
துத்திக்கீரை … வாய்ப்புண் ,வயிற்றுப்புண் நீக்கும் ,வெள்ளை மூலம் விலகும் .
காரா கொட்டிக்கீரை … மூலநோயை போகும் ,சீதபேதியை நிறுத்தும் .
மூக்கு தட்டை கீரை … சளியை போக்கும் .
நாறுதாளிக்கீரை … ஆண்மையை பெருக்கும் ,வாய்ப்புண் நீக்கும் .
பிரண்டை துவையல் பசியை தூண்டும் தன்மை கொண்டது .
முளைக்கீரை சாப்பிட்டு வர மலச்சிக்கல் நோய் குணமாகும்.
தினசரி ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வர இதய துடிப்பு சரியாகும் .
கற்பூர வாழை கண்ணிற்கு குளிர்ச்சி தரும் .
மாதுளம் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியேறும் .
கல்லீரல் வீக்கம் குணமாக செவ்வாழை பழம் சிறந்தது .
பச்சை வாழைப்பழம் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் .
பேயன் வாழைப்பழம் உடல் வெப்பத்தை குறைக்கும் .
எலுமிச்சை மலச்சிக்கலை குணமாக்கும் தன்மை கொண்டது .
நெல்லிக்கனி உடல் அசதியை போக்கி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் .
மாதுளம் பழச்சாற்றில் பால் சேர்த்து சாப்பிட்டால் இரும்பு சத்து அதிகரிக்கும் .
முளைக்கீரை வாரம் ஒரு நாள் சாப்பிட்டால் இளநரை நீங்கும் .
அத்திப்பாலை பற்று போட மூட்டுவலி குணமாகும் .
மூல வியாதி உள்ளவர்களுக்கு பப்பாளி சிறந்த மருந்தாகும் .
தலைவலி ,ஜலதோஷம் ,இருமல் சரியாக முள்ளங்கி சாறு சாப்பிடலாம் .
வெந்தயக்கீரை சமைத்து சாப்பிட்டு வர இருமல் குணமாகும் .
வெற்றிலை சாறு ஓரிரு துளிகள் காதில் விட்டால் காதுவலி குணமாகும் .
ரோஜாப்பூ கஷாயம் செய்து ரணங்களை கழுவ சதை வளர்ந்து ஆறும் .
தேங்காய் பாலுடன் தேன் கலந்து சாப்பிட வாய்ப்புண் குணமாகும்.
கோரை கிழங்கு பொடி தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல் பொலிவு பெரும்.
அகத்திகீரை வாரம் ஒரு நாள் சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும் .
இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்திகரிக்கப்படும் .
ஆடாதொடை இலை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மூச்சு திணறல் குணமாகும் .
வேப்பம்பட்டையை இடித்து கஷாயமாக காய்ச்சி தடவினால் தீப்புண் காயம் சரியாகும் .
வாழை குருத்தை பிரித்து கட்ட தீப்புண் கொப்பளங்கள் சரியாகும் .
இஞ்சி சாறு ,மாதுளம்பழ சாறு ,தேன் கலந்து குடிக்க இருமல் சரியாகும்.
ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும் .
பப்பாளி பாலை வாய்ப்புண், நாக்கில் உள்ள புண்ணிற்கு தடவினால் குணமாகும் .
வல்லாரைகீரை தொடர்ந்து சாப்பிட்டால் யானைக்கால் நோய் சரியாகும்
ஆப்பிள் பழத்திற்கு மலச்சிக்கலை போக்கும் தன்மை உள்ளது.
சேப்பங்கிழங்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெரும்.
நாயுருவி இலை சாறு தடவினால் தேமல் படை குணமாகும்.
துளசி சாறு இஞ்சி சாறு சம அளவு கலந்து குடித்தால் ஜலதோஷம் சரியாகும் .
சங்கு இலையை துவையலாக செய்து சாப்பிட்டு வர ஆஸ்துமா குணமாகும் .
இஞ்சி சாறு ,எலுமிச்சை சாறு தேன் கலந்து சாப்பிட மார்புவலி சரியாகும் .
சாதம் வடித்த கஞ்சியை தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் வேர்குரு சரியாகும் .
சொறி ,சிரங்கு ,புண்கள் ஆற கோவை இலை கஷாயம் குடிக்கலாம் .
கோரைக்கிழங்கு கஷாயம் குடித்தால் எப்பேற்பட்ட காய்ச்சலும் குணமாகும் .
சேற்று புண் குணமாக காய்ச்சிய வேப்பஎண்ணெயை தடவ வேண்டும் .
பசுந்தயிர் காசநோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது .
ரஸ்தாளி பழம் கண்ணிற்கும் உடல் வலிமைக்கும் நல்லது .
பீட்ருட் கிழங்கு சாப்பிட்டால் புதிய ரத்தம் உருவாகும் .
சர்க்கரை சேர்க்காத கடுங்காப்பி ஜலதோஷத்தை சரியாக்கும் .
மாமரத்து பிசினை தொடர்ந்து தடவி வர பித்த வெடிப்பு சரியாகும் .
பனங்கிழங்கு பித்தத்தை நீக்கி உடல் பலத்தை அதிகரிக்கும் .
அகத்திக்கீரை வேகவைத்த தண்ணீரை குடிக்க வாய்ப்புண் ஆறும் .
மாம்பழம் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது .
நெல்லிக்காய் நீரை கண்ணில் போட்டு வர கண் நோய் தீரும் .
சோயா பீன்ஸ் தினசரி உணவுடன் சாப்பிட்டு வர சோகை தீரும் .
கோவை கிழங்கு சாறு 10 மி.லி. குடிக்க மார்பு சளி நீங்கும் .
ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு கொண்டால் பல்வலி தீரும் .
மலைவேம்பு இலையை அரைத்து தலையில் பூச பேன் ஒழியும் .
தினசரி ஒரு பேரிக்காய் சாப்பிட்டால் இதய படபடப்பு நீங்கும் .
அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும் .
சுண்டைக்காய் சமைத்து உண்ண கபம் நீங்கும் .
நெல்லி இலையை கஷாயம் செய்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும் .
அவரை இலை சாறை தயிருடன் சேர்த்து சாப்பிட பேதி நிற்கும் .
ஜாதிக்காய் ,சந்தனம் ,மிளகு சேர்த்து அரைத்து தடவினால் பரு குணமாகும் .
காட்டாமணக்கு பாலை வாயில் வைத்து கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும் .
நன்றி வணக்கம் …