Visitors have accessed this post 750 times.

இயற்கை தயிர்

Visitors have accessed this post 750 times.

14. இயற்கை தயிர் மற்றும் மோர் (14/45):*

 

*இயற்கை தயிர்:*

 

*தேவையான பொருட்கள்:*

1. தேங்காய்                 – தேவையான அளவு

2. எலுமிச்சை சாறு  – தேவையான அளவு

 

*செய்முறை:* 

 

1.  தேங்காய் பால் ஒன்று முதல் இரண்டு முறை வரை கெட்டியாக எடுக்கவும்.

 

2. தேங்காய் பாலுடன் எலுமிச்சை சாற்றை கலந்து வைக்கவும்.

 

3. ஆறு மணி நேரத்திற்கு பின்பு நமக்கு தேவையான தயிர் தயாராகிவிடும்.

 

4. ஆறு மணி நேரத்திற்கு பிறகு முழுவதுமாக பயன்படுத்தி விடுவது நல்லது. அதிக நேரம் வைத்திருப்பது புளிப்பு தன்மையை அதிகபடுத்திவிடும்.

 

இயற்கை மோர்:

தேவையான பொருட்கள்:

1. தேங்காய்                           – தேவையான அளவு

2. சீரகம்                                  – சிறிதளவு

3. கறிவேப்பிலை               – சிறிதளவு

4. கொத்தமல்லி இலை  – சிறிதளவு

5. தோல் நீக்கிய இஞ்சி  – சிறிதளவு

6. உப்பு                                    – தேவையான அளவு

7. எலுமிச்சை சாறு           – தேவையான அளவு

செய்முறை:

1. மேலே உள்ள 1 முதல் 6 வரை உள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து அரைத்து ஒன்று முதல் நான்கு முறை வரை தேங்காய் பால் எடுக்கவும்.

2. எடுத்த பாலுடன் எலுமிச்சை சாற்றை கலந்து பருகவும்.

3. உடனேவும் பருகலாம். இரண்டு மணிநேரம் கழித்து பருகினால் சிறப்பு. அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்குள் பருகுவது நல்லது.

 

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam