Visitors have accessed this post 616 times.
வரகு கட்லெட்
மதியம் மீந்து போன வரகரிசி சாதத்தை கொண்டு சுவையான சத்தான கட்லெட் செய்து மாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி உண்பார்கள். செய்வதும் எளிது.
தேவையான பொருட்கள்:
வரகரிசி சாதம் – 1 கப்
உருளை கிழங்கு – 2
கேரட் – 1/2 கப்
பச்சை பட்டாணி – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
கரம் மசலாத்தூள் – 1 டீஸ்பூன்
புதினா,கொத்தமல்லி இலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அரை கப் வரகரிசியை கழுவி மூன்று மணி நேரம் ஊற வைத்து சாதம் தயார் செய்து கொள்ளவும். மதியம் செய்த சாதம் மீதம் இருந்தால் அதில் ஒரு கப் அளவு எடுத்து கொள்ளவும். உருளைகிழங்கை வேகவைத்து தோலுரித்து எடுத்து கொள்ளவும்.
இதனுடன் பச்சை பட்டாணி, துருவிய கேரட் மற்றும் விரும்பும் காய்கறிகளை சேர்த்து இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்கி, புதினா, கொத்தமல்லி இலையை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
அதனை ஆறிய வரகரிசி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக தட்டி தோசக்கல்லில் போட்டு திருப்பி எடுத்தால் சுவையான கட்லெட் ரெடி. இதே போல் சாமை, திணை, குதிரைவாலி, பனிவரகு, குலைசாமை என அனைத்திலும் செய்யலாம்.