Visitors have accessed this post 323 times.

Tamil jokes

Visitors have accessed this post 323 times.

பொறுமையா படிங்க. விழுந்து விழுந்து சிரிப்பீங்க….

*வாங்க மேட்டருக்கு போகலாம்…*

 

*ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்யும்போது அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்…*

 

*நீதிபதி:*  ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தாய்.. இது குற்றம் என்று உனக்கு தெரியாதா… ???

 

*குற்றவாளி:* எல்லாம் குடும்ப பிரச்சனை தான் காரணம் மை லார்ட்…!

 

*நீதிபதி:* யாருக்குத்தான் குடும்பப் பிரச்சனை இல்ல… அப்படி என்னதான் உன் பேமிலி பிராப்ளம்… பொல்லாத பிராப்ளம்… !!???

 

*குற்றவாளி:*  கணம் நீதிபதி அவர்களே…

ஏன் சோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்… 👇👇👇👇

 

நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டேன் வீட்டில் யாருக்கும் தெரியாமல்…. 😊😊

 

ஏற்கனவே அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண் இருந்தாள்… 😡😡

 

அந்த பெண்ணை என் தகப்பனார் காதலித்து எனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்… 😈😈

 

அதாவது என் தகப்பனார் எனக்கே மாப்பிள்ளை ஆனார்…! 😀😀

 

என் தகப்பனாரை திருமணம் செய்து கொண்டதால் என் ஒன்று விட்ட மகள் எனக்கு சித்தி ஆனாள்… 😢😢

 

காலம் ஓடியது…..

 

என் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்…. 

 

அவன் என் தகப்பனாருக்கு மைய்த்துனன் ஆனான்…😕😕

 

என் சித்தியின் சகோதரன் ஆதலால் என் மகன் எனக்கு மாமன் ஆனான்…😥😥

 

என் தகப்பனாரின் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.அவன் எனக்கு சகோதரன்…. 😢😢

 

அவனே எனக்கு பேரனும் ஆனான்…😇

 

என் மகளின் மகன் அல்லவா? 😁😁

 

அதே போல் என் மனைவி என் பாட்டியானாள்…😂😂

 

என் சித்திக்கு தாய் அல்லவா? 😊😊

 

நான் என் மனைவிக்கு கணவனாகவும், பேரப்பிள்ளையாகவும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டியதாயிற்று… 👌👌

 

ஒருவனுடைய பாட்டிக்கு கணவனாக இருப்பவன் அவனுக்கு தாத்தா ஆகிறான் அல்லவா? 😥😥

 

அப்படி பார்த்தால் நான் எனக்கே தாத்தாவாகிறேன்… 😕😕

 

இக்குழப்பமே என் தற்கொலைக்கு காரணம்…☺☺

 

நீதிபதி மயக்கம் போட்டு விழுந்துட்டார். 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam