Visitors have accessed this post 285 times.

கற்றாழை மருத்துவ பயன்கள்

Visitors have accessed this post 285 times.

கற்றாழை மருத்துவ நன்மைகளை

16 May 2023

 

 

 * கற்றாழை பயன்கள். . நாம் அன்றாட வாழ்க்கை பயன்படுத்தும் பொருளான கற்றாழை 

ஏராளமான நன்மை இருக்கிறது .அப்படி பட்ட கற்றழையின் நனமைகளின்பரி காண்போம் . .உடல் 

சூடு தணிய:“ கற்றாழைய ஒரு காயகற்ப மூலிகைனு சொல்லலாம். கற்றாழை பொடியை முறையா 

சாப்பிட்டு வந்தா, எப்பவும் இளமையா உடல் வன்மையோட வாழலாம். பொதுவா கற்றாழை உடல் 

சூட்ட தணிச்சு, உடலுக்கு வலிமைதருது.வீக்கம்குறைய:

3.“கற்றாழைச் சாறை வெதுவெதுப்பா சூடாக்கி வீக்கத்தில, அடிப்பட்ட இடங்கள்ல 

இருக்குற சிவப்பான இடத்துல பூசி வந்தா நல்ல பலன் கிடைக்கும்.”. தினமும் சோற்றுக் 

கற்றாழை சாறு குடிப்பதால், நம் உணவினை ஜீரணிக்கும் அமைப்பு சுத்தம் 

செய்யப்படுகிறது. இதனால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதில்லை. மேலும், குடலையும் 

சுத்தம் செய்து மலச்சிக்கலையும் தடுக்கிறது. தினமும் இச்சாறை குடிப்பதால், உடலை 

நல்ல நிலையில் வைத்திருக்க முடியும். அதேபோல், உடல் சக்தியை அதிகரிக்கவும் 

முடியும்.

கற்றாழை ஜெல்லில் வைட்டமின்கள், நொதிகள், கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள், 

சர்க்கரைகள், ஆந்த்ராகுவினோன்கள், கொழுப்பு அமிலங்கள், ஹார்மோன்கள், லிக்னின், 

சபோனின்கள் சாலிசிலிக் அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியுள்ளன.

 

 

 

பீரியட்ஸ் நேரத்தில் உதிரபோக்கு துர்நாற்றமா… இதை ஃபாலோ பண்ணுங்க கண்ட்ரோல் ஆகும்!

 

 

இது உடலுக்கு குளிர்ச்சியான தன்மையை அளிக்கிறது. மேலும் இந்த மூலிகைகளில் 

லுபியோல், சாலிசிலிக் அமிலம், யூரியா நைட்ரஜன், இலவங்கப்பட்டை அமிலம், பீனால்கள் 

மற்றும் கந்தகம் உள்ளன. கற்றாழை ஜெல் சருமத்தில் சூரிய கதிர் வீச்சுக்கு எதிராக 

செயல்படுகிறது.முடியில் கற்றாழை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் என்ன? உங்கள் 

முடி சுருட்டையாக இருந்தால் கற்றாழை பயன்படுத்தலாம்.முடி உலர்ந்து போய் இருப்பது 

போன்ற பிரச்சனைக்கும் கற்றாழை உதவுகிறது.நீண்ட கூந்தலை பெறவும் கற்றாழை காரணமாக 

உள்ளது.உங்களுக்கு கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? நீங்களும் பயன்படுத்தலாம் 

கற்றாழை. முகஅழகு

பெண்கள் அனைவருமே தங்களின் முக தோற்றம் பொலிவுடன் இருக்க இன்றைய காலத்தில் தீமை 

உண்டாக்கும் ரசாயனங்கள் அதிகமுள்ள அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகின்றனர். 

தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தோல் நீக்கிய கற்றாழை தண்டுகளை நன்கு 

அரைத்து, முகம் முழுவதும் பூசி கால் மணிநேரம் அல்லது அரைமணி நேரம் கழித்து முகம் 

கழுவினால் முகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மை நீங்கி முகம் பொலிவு பெறும். 

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வடுக்கள் மறையும். நீரிழிவு நோய்

அமெரிக்க நாட்டில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் படி கற்றாழை தண்டுகளை 

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது சாப்பிட்டு வந்ததில் அவர்களின் 

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக 

கண்டறிந்துள்ளனர். நம் நாட்டில் நெடுங்காலமாகவே நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை 

சாறு மருந்தாக உட்கொள்ள நமது பாரம்பரிய மருத்துவத்தில் 

அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. புற்று நோய்

கற்றாழை நச்சுத்தன்மைகளை எதிர்த்து போராடி அவற்றை அழிப்பதில் சிறப்பாக 

செயலாற்றுகிறது என்பதை நாம் ஏற்கனவே அறிந்து கொண்டோம். மனிதர்களுக்கு பல 

காரணங்களால் அவர்களின் உடலில் உண்டாகும் புற்று நோய் செல்கள் மீண்டும், மீண்டும் 

வளரக்கூடியவை. இத்தகைய தீமையான செல்களை அழித்து, ஆரோக்கியமான செல்களை உடலில் 

வளர்ச்சி பெற செய்யும் ஆற்றல் கற்றாழைக்கு உண்டு. எனவே புற்று நோய் ஏற்படாமல் 

தடுக்க நினைப்பவர்களும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கற்றாழையை மருத்துவ 

உணவாக பயன்படுத்துவது நல்லது.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam